51_questionmark_vinaakkuri

ஏ….இறையே…! – இருவரியில் சொல்வேன்

நல்லவற்றைக் கிள்ளித் தருகிறாய்!;

அல்லவற்றைஅள்ளித் தருகிறாய்! ஏன்?

​வாழும் வழிகேட்டு நிற்பவரை வீழ்த்தி

வலிகூட்டிச் செல்கிறாய் ஏன்​ ?

துதித்தவரைத் துன்பத்துள் தள்ளும் தவறு;

மதிதெளிந்த செய்கையா கூறு

சோதனைமேல் சோதனைதந்து உம்குடியை

வேதனைக்குள்தள்ளுவதா சாதனை?​

சொல்மெய்தானோ!

இல்லையென்று சொல்லவில்லை; நல்லது
தான்இருந்தால்என்போரின் கூற்று

ஏன் இப்படி ? ​

பிடியும்…என் சாபம் படியும் :


51_iraiye_kelvi
துதிப்பவரை எற்றி மிதிப்பவரை, போற்றிஇறை
என்பவரைத் தூற்றும் உலகு

இரைஞ்சும் அடியவரைக் கைவிடு வோரை
இறையல்ல என்று விடு

இரைகேட்கும் குஞ்சைஇரை ஆக்காது அதன்தாய்;
மறைஇதைச் சொல்வீர் இறைக்கு

துதிப்போரைச் சாய்க்கசதி செய்யும் இறையை
மதிப்போரும் மாய்வார் விரைந்து

​நிழல்வேண்டி நிற்பவரைத் தள்ளிவிடு  வோர்க்கு

புழல்வெளியில் உண்டாம் இடம் ​​

​.​

http://marabukkanavukal.blogspot.in/2014/10/blog-post_29.html