ilakkuvanar+05

 அலக்கண் வரினும் கலக்கமின்றி
செந்தமிழ்க் கொடியை முந்துறத் தாங்கி
தன்மானத்தைப் பொன்னெனக் காத்த
நுண்மாண் புலவர்; நூல்பல பயின்று
நன்மாணவரை நன்கு பயிற்றி
வீரத் தமிழர்வெற்றிப் படையை
ஊக்கிய செம்மல் உள்ளத் துடிப்பெலாம்
நந்தமிழ் வாழ்கென நடக்கும் புரவலர்
இலக்குவனாரின் இலக்கணச சிறப்பும்
தனித்தமிழ்க் கொஞ்சும் இனித்த நடையும்
நிமிர்ந்த வீறும் அமைந்த சீரும்
எண்ணிஎண்ணி ஏத்திடுவோமே!

– கவியோகி சுத்தானந்த பாரதியார்

kaviyogi_suthananthabharathiyar01