labourer01

காடு களைந்தோம் – நல்ல கழனி திருத்தியும் உழவு புரிந்தும்

நாடுகள் செய்தோம்: – அங்கு நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்.

வீடுகள் கண்டோம்: – அங்கு வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்.

பாடுகள் பட்டோம் – புவி பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.

மலையைப் பிளந்தோம் – புவி வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்.

அலைகடல் மீதில் – பல் லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்.

பல தொல்லையுற்றோம் – யாம் பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்.

உலையில் இரும்பை – யாம் உருக்கிப்பல் இயந்திரம் பெருக்கியுந் தந்தோம்.

labourer07

ஆடைகள் நெய்தோம் – பெரும் ஆற்றை வளைத்துநெல் நாற்றுகள் நட்டோம்.

கூடை கலங்கள் – முதல் கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்.

தேடிய பண்டம் – இந்தச் செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.labourer08

வாழ்வுக் கொவ்வாத – இந்த வையத்தை இந்நிலை எய்தப் புரிந்தோம்.

ஆழ்கடல், காடு, – மலை அத்தனை யிற்பல சத்தை எடுத்தோம்.

ஈழை, அசுத்தம் – குப்பை இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.

கந்தை யணிந்தோம் – இரு கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.

மொந்தையிற் கூழைப் – பலர் மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்.

சந்தையில் மாடாய் – யாம் சந்ததம் தங்கிட வீடு மில்லாமல்

சிந்தை மெலிந்தோம் – எங்கள் சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?

 bharathidasan09