52pakutharivuchuuti_thalaippu

யாரால் எங்கே எப்பொழுது என்ன

எப்படி யாருக்கு ஏன்என வினவிப்

பகுத்து விளைவை அறிந்து வாழ

ஊக்கும் வகையில் வகுத்த பாவே

பகுத்தறிவு சூடி என்னும்இந் நூலே

 

01 அறிவியலுணர்வு கொள்

02 ஆருடம் பொய்

03 இழிதொழில் ஏது?

04 ஈட்டுக அறிவு

05 உன்னை அறி

06 ஊர்நலம் பேண்

07 எளிமையே மேல்

08 ஏனெனக் கேள்

09 ஒழுக்கம் உயர்வு

10 ஓம்புக மானுடம்

11 கடவுள் இல்லை

12 காலம் கருது

13 கிலியைக் கொல்

14 கீழ்மை அறு

15 குலம்பல எதற்கு

16 கூடி வாழ்

17 கெடுமதி விடு

18 கேண்மை போற்று

19 கொடுமை எதிர்

20 கோலம் புதுக்கு

21 சடங்குகள் அகற்று

22 சாத்திரம் களவு

23 சிறப்புடன் வாழ்

24 சீர்மை தேவை

25 சுடர்முகம் தூக்கு

26 சூழல் நோக்கு

27 செந்தமிழ் பயில்

28 சேவை செய்

29 சொல்வழி நில்

30 சோர்வு நீக்கு

31 தமிழைப் புதுக்கு

32 தாய்மொழிவழி பயில்

33 திருத்துக பிழையை

34 தீண்டாமை மடமை

35 துருவிப்துருவிப் பார்

36 தூய்மையாய் இரு

37 தெளிவுடன் வாழ்

38 தேனீபோல் உழை

39 தொலைநோக்கு தேவை

40 தோழமை கொள்

41 நல்லவராய் நட

42 நானிலம் சுற்று

43 நிமிர்ந்து நில்

44 நீக்குவன நீக்கு

45 நுணுகி நோக்கு

46 நூல்பல கல்

47 நெறிவழி செல்

48 நேர்மையே கற்பு

49 நொவ்வுடல் தேற்று

50 நோயற்று வாழ்

51 பகுத்தறிந்து ஏற்றிடு

52 பாகுபாட்டை ஒழி

53 பிறரை மதி

54 பீடை ஏது

55 புலமை பெறு

56 பூமியைப் பொதுசெய்

57 பெண்டீர் பெரியோர்

58 பேருளம் கொள்

59 பொலிவுடன் விளங்கு

60 போர்வெறி விலக்கு

61 வல்லவராய் வாழ்

62 வாய்மை போற்று

63 விதி பொய்

64 வீண்கதை தவிர்

65 வுழைப்புப் பொது

66 வெறுப்பு வேண்டா

67 வேற்றுமை விலக்கு

68 மடமையைக் கொல்

69 மானம் பெரிது

70 மிகுபொருள் கேடு

71 மீன்போல் இயங்கு

72 முயற்சியே வெற்றி

73 மூடநம்பிக்கையை விலக்கு

74 மெய்யினைத் தேடு

75 மேன்மை நடத்தையில்

76 மொழிபல அறி

78 மோழைமை ஒழி

 

– அரிஅரவேலன்

 

 தரவு :  புலி உறுமுது

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/07/pirar-karuvuulam.png