makkal-kuuttam01

 

கடற்கோளால் சிதறுண்டு கடல்கடந்து சென்றோம்;

கற்றறிவின் துணைகொண்டு சூழலுக்குள் வாழ்ந்தோம்;

அடக்குமுறை கொள்கையாளர் ஆட்சியினைப் பற்றி

அழித்துவிட்டார் பண்பாட்டுக் கூறுகளை மெல்ல;

கடந்துவந்த பயணத்தை ஓரளவே பதிந்தோம்;

காணாமல் விட்டவற்றை கண்டறிந்து பதிவோம்;

அடங்காத உணர்ச்சிநிலை ஆய்வுகளால் பயன்என்

ஆய்வுசெய்யும் சித்தனாகி அறம்செழிக்கச் செய்வோம்.

                                                                            –  சுமதிசுடர், பூனா

Sudar67-01