தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுக் குழு முடிவுகள்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு
சென்ற மார்கழி 13, 2045 / 28.12.2014 ஞாயிறு அன்று
சென்னையில் கூடி எடுத்த ஒருமன முடிவுகள்:
1) தோழர் தியாகு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
2) தோழர் வே.பாரதி இயக்கத்தின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
3) தோழர் தியாகு, தோழர் வே.பாரதி, தோழர் பாரி ஆகியோரைக் கொண்டதே இயக்கத்தின் புதிய தலைமைக் குழு.
4) தமிழ்த் தேசம் இதழின் ஆசிரியராகத் தோழர் தியாகு தொடர்வார். தோழர் ஆதவன், தோழர் குருநாதன் ஆகியோர் இதழின்ஆசிரியர்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுஇணைத்துக்கொள்ளப்படுகின்றனர். ஆசிரியர்குழு இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, இதழ் குறித்துத் திறனாய்வு செய்து கொள்ள வேண்டும்.
5) இப்போதுள்ள உறுப்பினர்களைக் கிளைகளாகப் பிரித்து அமைத்துத் தொடர்ந்து இயங்கச் செய்வது தலைமைக் குழுவின் பொறுப்பாகும்.
6) இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் மாதப் பங்களிப்புச் செலுத்துவது, தமிழ்த் தேசம் இதழைப் பரப்புவது, இயக்கத்திற்கு நன்கொடையாளர்களையும் ஆதரவாளர்களையும் சேர்ப்பது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது ஆகியவை இன்றியமையாக் கடமைகளாகும். இக்கடமைகளைச் செய்து அதைக் கிளைகளின் மூலம் தலைமைக்கு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்கவேண்டும்.
7) தீ வளி (மீத்தேன்) எதிர்ப்பு இயக்கம், அணுஉலை எதிர்ப்பு இயக்கம், தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம், இந்தி-சமற்கிருத-ஆங்கிலத் திணிப்பு எதிர்ப்பு இயக்கம், மோதி அரசின் பார்ப்பனீயப் பண்பாட்டு எதிர்ப்பு இயக்கம், காவிரி-முல்லைப் பெரியாறு மீட்பு இயக்கம், தமிழீழ மக்களுக்கான ஈடுசெய் நீதிப் போராட்டம் ஆகியவற்றில் தற்சார்பாகவும் கூட்டாகவும் முனைப்புடன் இயக்கம் செயல்பட வேண்டும்.
பொதுக்குழு முடிவுகள் அருமை அதன் செயலாக்கத்தில்தான் இயக்கப்பெருமை