யாரைத் தேர்வு செய்வார்?

நல்லார் கெட்டார் என்றிருவர்

நடக்கும் தேர்தலில் போட்டியிட்டால்,

எல்லா வாக்கும் பெற்றவராய்,

ஏய்க்கும் கெட்டவர் வென்றிடுவார்!

இல்லா நேர்மை இவ்வுலகில்,

இறைமகன் இயேசுவே நின்றாலும்,

பொல்லார் வாக்கு தரமாட்டார்;

புனிதரைத்தான் கொன்றிடுவார்!

– கெருசோம் செல்லையா