63ayapaa-dinner

தேனி மாவட்டத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா

தேவதானப்பட்டியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் அன்னதானம் நிறைவு விழா நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில் காருண்யாதேவி இறைவணக்கம் பாடினார். சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் மாவட்ட இணைச்செயலாளர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்குக் கணேசன் தலைமை தாங்கினார்; வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்; சிறப்பு அழைப்பாளராக சுவாமி அத்யாத்மானந்தா அவர்கள் அழைக்கப்பட்டார்; முகாம் பொறுப்பாளர் பெருமாள்தேவன் நன்றி கூறினார்; கோட்டச்செயலாளர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.

  54 நாட்கள் ஐயப்ப சேவா சங்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய பொறுப்பாளர்கள் கூறியதாவது, இந்நிகழ்ச்சயில் நான்கு வகை சேவைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதில் 780 பேர்களுக்கு மருத்துவ உதவியும், 4800 பேர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

vaigai aneesu