த.த.நூற்றாண்டு,தஞ்சை0 : tha.tha.nuutraandu_thamizhamallan03

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன்

ஆடி 01, 2047 / சூ லை 16,2016 அன்று தஞ்சையில்  நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா மாநாட்டில்   முனைவர் க.தமிழமல்லன  பங்கேற்றார்.

மூன்று நாள் விழாவின் இராண்டாம் நாளான அன்று காலையில் புலவர்மணி இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில்  கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் ‘தனித்தமிழில் பெயர் வைத்தல்‘ எனும் தலைப்பில் உரையாற்றினார். நண்பகல் 1.50மணிமுதல் 2.30மணிவரையில்  நிகழ்த்திய அவருடைய சொற்பொழிவை மக்கள் விரும்பிக் கேட்டனர். அவருடைய சொற்பொழிவுக்குச் சிறந்த பாராட்டுக் கிடைத்தது. முன்னதாக வெளியே சென்றவர்கள்கூட விரைந்து உள்ளே வந்து அமர்ந்து ஆர்வத்துடன் விரும்பிக் கேட்டனர்.

அந்த மாநாட்டை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் மாமறவர் பழ.நெடுமாறன் அரிதின் முயன்று சிறப்பாக நடத்தினார்.அவர் சிறந்த பாராட்டிற்குரியவர். தஞ்சையில் மட்டுமின்றி வேறு சில இடங்களிலும் இந்தத் தனித்தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

த.த.நூற்றாண்டு,தஞ்சை02 : tha.tha.nuutraandu_thamizhamallan02 த.த.நூற்றாண்டு,தஞ்சை01 :tha.tha.nuutraandu_thamizhamallan01