பதுளை மாவட்டத்தில் பசறை கோணகலை கீழ்ப்பிரிவுத் தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 48 குடும்பங்களுக்கு 7 நிலவை காணியில் தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது.

  மலைநாட்டுப் புதியசிற்றூர்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாயமேம்பாட்டு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேசு, அரவிந்தகுமார் ஆகியோரும் தொழிலாளர் தேசியச் சங்கத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர்  இராசமாணிக்கம்  முதலான பகுதி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]