56ammaa_thittam

தேனி மாவட்டத்தில் அம்மாதிட்டம்

பயனாளிகளுக்கு உடனடிச் சான்றிதழ்

  தேனிமாவட்டத்தில் உள்ள முதலக்கம்பட்டியில் அம்மாதிட்டம் நடைபெற்றது.

  இத்திட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் வீ.முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் முதலக்கம்பட்டி, வைகைப்புதூர், சங்கரமூர்த்திபட்டி, இந்திரா குடியிருப்பு முதலான பகுதியைச்சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.

  அவர்களுக்கு வேண்டிய சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டையில் பெயர்நீக்கல், பெயர் சேர்த்தல், உரிமை(பட்டா)மாறுதல், மரபுரிமையர்சான்றிதழ் போன்றவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியல் வட்டாட்சியர் இரமேசு, சமூக நலத்துறை வட்டாட்சியர் சொரூபராணி, மண்டலத் துணை வட்டாட்சியர் ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர் சித்ராதேவி, முதலக்கம்பட்டி ஊர் நிருவாக அதிகாரி கனிப்பிரியா, ஊராட்சிச் செயலாளர் வீரபத்திரன், ஊர் நிருவாக அதிகாரி உதவியாளர் பாசுகரன் முதலான பலரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் 100க்கும் மேற்பட்டோர்களுக்குச் சான்றிதழ், பகிர்வு அட்டை போன்றவை வழங்கப்பட்டன

56vaigaianeesu_name