அரசால் வழங்கப்பட்ட நிலம் விற்பனை!

முதலக்கம்பட்டி ஊராட்சியில் அரசால் வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) நிலம் விற்பனை  தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் முறையிடுகின்றனர்  முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி மேடு, சருக்கரை ஆலை ஆகிய பகுதிகளில் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 2 காணி(ஏக்கர்) நிலம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்படும் நிலத்திற்குப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களான 2 காணி(ஏக்கர்) நிலம், பூமிதான நிலம், பஞ்சமி நிலம் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என விதி…

முதலக்கம்பட்டியில் ஊர் நிருவாக அலுவலகம் எங்கே?

முதலக்கம்பட்டியில் ஊர் நிருவாக அலுவலர் அலுவலகத்தைத் தேடி அலையும் பொதுமக்கள்   தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியில் ஊர் நிருவாக அலுவலகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். முதலக்கம்பட்டி ஊராட்சிக்குற்பட்ட வைகை புதூர், சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி முதலான ஊர்களுக்கு ஊர் நிருவாக அலுவலகம் முதலக்கம்பட்டியில் உள்ளது.  முதலக்கம்பட்டியில் ஊ.நி.அ.திகாரி அலுவலகத்திற்குக் கட்டடம் இ;ல்லை. இதனால் ஊ.நி.அ. அலுவலகக் கட்டடம் வருடத்திற்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சமுதாயக்கட்டடத்தில் இயங்கியது. அதன்பின்னர் அக்கட்டடம் புறநூலகமாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் ஊர் வறுமை ஒழிப்புச் சங்கத்திற்குச்…

வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்-ஊராட்சிமன்றத் தீர்மானம்

வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் ஊராட்சிமன்றத்தில் தீர்மானம் தேனிமாவட்டத்தில் உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் வெடி(பட்டாசு) வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வைகைப்புதூர், முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, இந்திரா குடியிருப்பு போன்ற பகுதிகளில் திருமண விழாக்கள், புதுமனை புகுவிழா, காதணிவிழா, பூப்புனித நீராட்டு விழா, துக்க நிகழ்ச்சி, கிடாவெட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்குக் காதைப் பிளக்கும் வண்ணம் வெடிகள் வெடிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன், நோயாளிகளும், முதியோர்களும் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் வெடிகளினால் ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்குக் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க…

தேனி மாவட்டத்தில் அம்மாதிட்டம் – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் அம்மாதிட்டம் பயனாளிகளுக்கு உடனடிச் சான்றிதழ்   தேனிமாவட்டத்தில் உள்ள முதலக்கம்பட்டியில் அம்மாதிட்டம் நடைபெற்றது.   இத்திட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் வீ.முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் முதலக்கம்பட்டி, வைகைப்புதூர், சங்கரமூர்த்திபட்டி, இந்திரா குடியிருப்பு முதலான பகுதியைச்சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.   அவர்களுக்கு வேண்டிய சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டையில் பெயர்நீக்கல், பெயர் சேர்த்தல், உரிமை(பட்டா)மாறுதல், மரபுரிமையர்சான்றிதழ் போன்றவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியல் வட்டாட்சியர் இரமேசு, சமூக நலத்துறை வட்டாட்சியர் சொரூபராணி, மண்டலத் துணை வட்டாட்சியர் ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர்…