நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் : வைகோ வெளியிட்டார்
சென்னையில் நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை – எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் “நீந்திக் கடந்த நெருப்பாறு” எனும் நூலை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
உடன் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் செபராசு, தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பைச்சேர்ந்த பாரி மைந்தன் முதலான கழக் பொறுப்பாளர்கள், முன்னணியினர், மாணவர்கள் எனத்திரளானோர் கலந்துகொண்டனர்.
Leave a Reply