muulikai payirchi01

மதுரை காமராசர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர்கல்வி- விரிவுப்பணித்துறை திட்ட அலுவலர் சாந்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு  வருமாறு:–

 மதுரை காமராசர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர் கல்வி-விரிவுப்பணித் துறை சார்பில், 6 மாதகால மூலிகை மருத்துவம் சான்றிதழ்ப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10– ஆம் நாள் தொடங்கும் இந்தப் பயிற்சி, வாரத்தில் 3 நாட்களுக்கு (ஞாயிறு முதல் செவ்வாய் வரை) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

 பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, மாணவ–மாணவியர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியில் சேர குறைந்தது 10– ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

 

விண்ணப்பங்களைப் பெற, பயிற்சி நடைபெறும் அழகர்கோவில் சாலையில் உள்ள பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர் கல்வி- விரிவு பணித் துறையை அணுகலாம். பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பல்கலைக்கழக துறையின் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், முதல் உதவிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.