‘தனித்தனிக்காவலர் இலக்குவனார்’ நூலுக்கு மதுரை நட்பு வட்டத்தின் பரிசு



‘தனித்தனிக்காவலர் இலக்குவனார்’ நூலுக்கு
மதுரை நட்பு வட்டத்தின் பரிசு
2025 ஆம் ஆண்டுப் படைப்புகளுக்கான பரிசுகள்
இணைப்புப் படப்பதிவுகளில் உள்ளவாறு பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.
நட்பு தமிழ் வட்டம்(மதுரை) அமைப்பு உறுப்பினர்களுக்கான சிறப்பு பேச்சுப்பயிற்சி,எழுத்துப் பயிற்சி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலக்கியப் பயிலரங்கங்கள், பொதுமக்களுக்கான தமிழ்வளர்ச்சிக் கருத்தரங்கங்கள், கல்லூரி மாணவர்களுக்கான நம்மை நாமறிவோம் பேச்சரங்கங்கள், கல்லூரிஅளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்துதல், சமத்துவம் மதநல்லிணக்கம் இந்திய இறையாண்மை பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கவியரங்கம் பட்டிமன்றம் நடத்துதல்,
அரசுப் பள்ளிகளுக்கு நூலகத்திற்கான அடுக்ககங்கள், நூல்கள் எழுத்து மேசைகள் எழுதுபொருட்கள் மின்விசிறிகள் வழங்குதல், அரசுப்பள்ளி மாணவர் திறன் மேம்பாட்டிற்கான திருக்குறள் முற்றோதல் கையெழுத்து,,பேச்சு,,கட்டுரை,பாட்டு, நடனம் எனப் பல்திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தி பின் போட்டிகளும் நடத்தி பரிசுகளும வழங்கல், இணையவழியில் தமிழகமெங்குமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்குத் திருக்குறள் ஒப்பித்தல், புரட்சிக் கவிஞர் பாடல்கள் ஒப்பித்தல், அறநெறிக் கதைகள் சொல்லல், தமிழிசைப் பாடல்கள் பாடுதல், கவிதை வாசித்தல், பேசுதல் எனப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
யாரிடமும் நன்கொடை வாங்காமல், குழுவினரே தங்களுக்குள் பணத்தைத்திரட்டி, ஆண்டுதோறும் பல்வேறு வகைப்பாடுகளில் பரிசுகள் வழங்குதல், சிறப்பாக நிகழ்ச்சி நடத்துதல் எனத் தொண்டாற்றி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள எழுத்தாளர்களுக்கான சிறந்த படைப்புப் போட்டி நடத்தி விருதுகளும் பரிசுகளும வழங்கப்படுகின்றன.
புலவர் நாநா ஆறுமுகம்
நிறுவுநர். & தலைவர்
நட்பு தமிழ் வட்டம்-மதுரை







Leave a Reply