ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா
எழுத்தாளர் கவிஞர் ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா
கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் நால்வருக்கு விருது வழங்கும் விழாவுமான முப்பெரும் விழாவில் ஆதிரை முல்லையின் “உச்சிதனை முகர்ந்தால்” என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
திரைப்பட நடிகர் இராசேசு தலைமை வகித்தார். கலைமாமணி பிறைசூடன் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். இலக்கிய வள்ளல் மாம்பலம் பாரி சந்திரசேகர் நூல்களைப் பெற்றுக்கொண்டார்.
கவியரசரின் திருக்குமரன் அண்ணாமலை கண்ணதாசன் நிகழ்வில் முன்னிலை வகித்தார்.
அன்பு நிறைந்த வணக்கம் ஐயா,
நிகழ்வை அழகாக ஒளிப்படங்களுடன் பதிவு செய்து நிகழ்வுக்கு வெளிச்சம் காட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.