சவூதி அரேபியா  இயித்தாவில் (Jeddah)  சித்திரை 01, 2048 / ஏப்பிரல் 14  வெள்ளிக்கிழமை அன்று  இயித்தா இசுலாமிய அழைப்பகம் தமிழ்ப் பிரிவு சார்பில் சிறப்பு மாநாடு  சிறப்பாக நடைபெற்றது.

  நிகழ்ச்சியில்  கல்வியாளர்(மவுலவி) இப்ராகிம் மதனி, கல்வியாளர் அன்சார் உசைன் பிருதவ்வி, இசுமாயில்  சியாகி , கல்வியாளர் முசாகி  இபன்  இரசீன், கல்வியாளர் அப்துல் பாசித்துபுகாரி,  உண்மை உதயம் ஆசிரியர் மவ்லவி இசுமாயில் சலபி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாகக் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இம்மாநாட்டில் தமிழ் பேசும் அனைத்துச் சமூக மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.