கொளத்தூரில் வினையகத்தின் பெண் குழந்தைகள் நாள்

மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) நிறுவனத்தின் மூலம் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் தை 10, 2050 /24.01.2019 அன்று ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில்  அறிவுரைஞர்(PDI) திருமிகு. இரேகா, பெண் குழந்தைகளுக்குச் சமமான கல்வியறிவு, ஊட்டச்சத்து, நலவாழ்வு உரிமைகள், சட்ட உரிமைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும், ஆண் பெண் வேறுபாடின்றிக் குழந்தைகள் எல்லா துறைகளிலும் முன்னேற்றப்பட வேண்டும் என்றார்.

 நாம் அனைவரும் “பெண் குழந்தையினைப்  போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் ‘தேசியப் பெண் குழந்தைகள் நாள்  2019’ கொண்டாடுவதற்கு மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) செயலர் முனைவர் இல.அம்பலவாணன் ஏற்பாடு செய்திருந்தார்.

செய்தி : நேத்திரா

முனைவர் இல.அம்பலவாணன்