தேவகோட்டை-கல்விவளர்ச்சிவிழா01 : kamarasarvizhaa01

மாணிக்கவாசகர் நடுநிலைப்பள்ளியில்

காமராசர் நினைவு கல்வி வளர்ச்சி நாள் விழா: 

நகர்மன்ற தலைவர்  பங்கேற்பு

 

தேவகோட்டை : தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் காமராசர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

 விழாவில் ஆசிரியை வாசுகி வரவேற்றார். விழாவின் தொடக்கமாக அபிராமி அந்தாதி, திருக்குறள் நடனம் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் மன்றத் தலைவர் சுமித்ரா இரவிக்குமார் விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசுகையில், காமராசர் எத்தனையோ தலைமுறை தாண்டியும் அனைவர் மனத்திலும் வாழ்ந்து கொண்டு உள்ளார். கல்விக்கு அதிக  முதன்மை கொடுத்தவர்; அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்; புகழ்ச்சியை விரும்பாதவர்; நுணுக்கமாய்ப் பேசுபவர்; பணிவு மிகுந்தவர்; இரத்தினச் சுருக்கமாகப் பேசுபவர்; விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர். அவர் ஏற்படுத்திக் கொடுத்த கல்விக் கூடங்கள்   அனைவருக்கும்  பயனாக உள்ளன.  இவ்வாறு பேசினார்.

 காமராசர் கல்வி வளர்ச்சி நாள் தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவியர் முத்தையன், அனுசயா, திவ்யசிரீ, வெங்கட்ராமன், மகாலெட்சுமி, ஐயப்பன், கார்த்திகேயன், இராசி, இரஞ்சித்து, பரத்குமார், தனலெட்சுமி ஆகியோருக்குத் தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் சுமித்ரா இரவிக்குமார் பரிசுகளை வழங்கினார்.

விழா நிறைவாக ஆசிரியர் சிரீதர் நன்றி கூறினார்.

[படங்களை அழுத்திப் பெரிய அளவில் காண்க.]