(பூங்கொடி 12 – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை- தொடர்ச்சி)
பூங்கொடி
அடிகளார் அறிவுரை
மாதே! பிறப்பும் மாய்வும் இயற்கை
80யாதே முயலினும் தடுத்திடல் அரிதே’
பெறலருங் கொழுநன் பிணியால் மாண்டிலன்
பிறரெவ ரும்பெறாப் பெருநிலை பெறவே
ஆருயிர் ஈங்கனன் அவனேர் வீரன்;
வீரப் பெருமகன் விடுபணி தொடர்ந்து
90 புரிந்தனி ராயின் பொருந்திய துயரம் முறிந்திடும்;
அவனுளம் நிறைந்திடும் ஆதலின்
முயன்றுறு செல்வம் முத்தமிழ்க் கல்வி
உயர்ந்திட உதவுக, உழைப்பும் நல்குக,
உழைப்பினை ...