(பூங்கொடி 12  – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை- தொடர்ச்சி)

பூங்கொடி

அடிகளார் அறிவுரை

மாதே! பிறப்பும் மாய்வும் இயற்கை

80யாதே முயலினும் தடுத்திடல் அரிதே’

பெறலருங் கொழுநன் பிணியால் மாண்டிலன்

பிறரெவ ரும்பெறாப் பெருநிலை பெறவே

ஆருயிர் ஈங்கனன் அவனேர் வீரன்;

வீரப் பெருமகன் விடுபணி தொடர்ந்து

90 புரிந்தனி ராயின் பொருந்திய துயரம் முறிந்திடும்;

அவனுளம் நிறைந்திடும் ஆதலின்

முயன்றுறு செல்வம் முத்தமிழ்க் கல்வி

உயர்ந்திட உதவுக, உழைப்பும் நல்குக,

உழைப்பினை உதவுக

கோவிலில் தமிழொலி குடிபுக வேண்டி

95 மேவிய விருப்பால் மேலோர் சிலரொடு

ஒல்லும் வகையால் உழைத்தும், ஊர்தொறும்

சொல்லியும் வருதல் தொழிலெனக் கொண்டுளேன்;

அச்செயல் ஆற்ற அரிவையர் சிலரும்

நச்சின ராகி உழைப்பினை நல்கின்

100  மெச்சிடும் வெற்றி மேவுதல் திண்ணம்,

என்றனர் யானும் எழிற்பூங் கொடியும்

ஒன்றிய உணர்வால் ஒப்புதல் தந்தோம் ;

சென்று காய்க்கும் பிறர்க்கும் செப்பெனச்

சென்றனள் தேன்மொழி செயலற வுற்றே. (104)

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி