image-38705

குவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020

பங்குனி 16,2051 / 29.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி செயமோகன் சிறுகதை சோற்றுக்கணக்கு குறித்து குவிகம் அளவளாவல் நிகழ்வு இணையம் மூலம் நடைபெறும். சோற்றுக் கணக்கு சிறுகதையினை வாசிக்க . இதில் பங்குகொள்ள விருப்பமுள்ளவர்கள் திரு சுந்தரராசன் அவர்களை 9442525191 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
image-38699

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 6

(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 5. தொடர்ச்சி)      அந்தச் சிற்றூருக்கு அலுவலர் யாரேனும் வரும்போது இந்தப் பேச்சு, நிகழும்; ஊரார்களின் உறவினராக யாராவது நகரங்களிலிருந்து வரும்போதும் இந்தப் பேச்சு நிகழும். அவர்களில் சிலர் விடாமல், 'அப்படியானால் நாங்கள் எல்லாம் நகரங்களில் இருந்து படித்து முன்னுக்கு வரவில்லையா? நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா? நாங்கள் குடும்பத்தில் அக்கறையாக வாழாமல், ...
image-38695

நம் எண்களை அறியாமல் இருக்கலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

  நம் எண்களை அறியாமல் இருக்கலாமா?   தமிழ் எண்கள் என்றால் என்ன? தமிழர்களாகிய நாம் தமிழில் பயன்படுத்தும் எண்கள்தாம் தமிழ் எண்கள். அப்படி என்றால் இப்பொழுது பயன்படுத்தி வரும் 1,2,3, முதலான வரிசை எண்கள் தமிழ் இல்லையா?  அரபி எண்கள் என்று சொல்லப்பட்டாலும் தமிழ் எண்களில் இருந்து உருவான அவை உலக எண்களாக மாறி விட்டன. ...
image-38692

தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3

  (தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 2. தொடர்ச்சி) இந்நல்லிசைப்புலவர் கருத்துக்கு ஒப்பவே, வரலாற்று நூற் புலமையில் நிகரற்று விளங்கிய ஆங்கில ஆசிரியரான பிரமீன் என்பவரும் “வேண்டப்படாத பிரஞ்சு இலத்தீன் மொழிச்சொற்கள் உரைநடையை உயிர்வுபடுத்துகின்றன வென்று பிழையாக கதப்படுகின்றனவே யல்லாமல், உண்மையில் அவை பொருட்குழப்பத்தையே மேலுக்கு மேல் உண்டு பண்ணுகின்றன; ஆதலால், அவற்றுக்கு மாறாகப் பொருட்டெளிவுள்ள வெளிப்படையான ...
image-38689

மகுடைக்குக் காலன்! – ஆற்காடு க. குமரன்

மகுடைக்குக் காலன்!   தனித்திருக்கிறேன் விழித்திருக்கிறேன் பொறுத்திருக்கிறேன் வெறுத்திருக்கிறேன்!   காலனாக வரும் மகுடைக்குக் காலனாகக் காத்திருக்கிறேன்!   என்னைத்தொற்றும் நோய்மி என்னோடு அழியட்டும்! என் உயிரைக் குடிக்கும் அதன் உயிரைக் குடிக்கிறேன் நான்!    என் தலைமுறைக்காக என் தலை வீழத் தயங்கேன்!   என்னுயிரோடு இந்நோய்மி  இறக்குமாயின் மண்ணுயிர்க்கிரையாய் மாண்டிடத் துணிகிறேன்!   மகுடையைக் கொல்லத் தனித்திருப்போம் விழித்திருப்போம் காத்திருப்போம்!   இவண் ஆற்காடு க. குமரன் 9789814114
image-38686

இதுதான் தமிழர் பண்பாடா? – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி

இதுதான் தமிழர் பண்பாடா? காக்கை, குருவி, ஈ, எறும்பு என அஃறிணை உயிர்களுக்குக் கூட விரும்பும் துணையுடன் வாழ இவ்வுலகில் உரிமை இருக்கிறது. ஆனால் இந்நாட்டிலோ மனிதர்களுக்கு அஃது இல்லை. தருமபுரியின் இளவரசன்-திவ்வியா முதல் இன்றைய இளமதி-செல்வன் வரை சாதியின் பெயரால் காதலர்களைப் பிரிப்பது இங்கு தொலைக்காட்சி நெடுந்தொடர் போல அன்றாடத் தொடர்கதையாகி விட்டது. போதாததற்குத், தமிழ் மக்களிடம் மிகுந்த ...
image-38677

மகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்

மகுடையில் இருந்து காத்திட...   அஞ்சுவதற்கு அஞ்சு! ஆற்றாமை வேண்டா! இல்லத்திலேயே இரு! ஈட்டமாய்(கூட்டமாய்) இராதே! உறவாயினும் விலகி நில்! ஊருக்குள் போகாதே! எச்சரிக்கையாய் இரு! ஏதுமிலார்க்கு உதவு! ஐயம் வந்தால் மருத்துவரைப்பார்! ஒவ்வொன்றிலும் தூய்மை பார்! ஓராது நம்பாதே! ஒளதம்(நோய் நீக்கி) உட்கொள்! இலக்குவனார் திருவள்ளுவன்
image-38674

குடும்பத்தை இணைக்கும் மகுடை! – ஆற்காடு க. குமரன்

குடும்பத்தை இணைக்கும் மகுடை! என் குடும்பத்தோடு என்னைக் கூட்டிக் கொடுத்தது அன்பைக் காட்டிக்கொடுத்தது   இணையம் கூட இன்று வந்தது இணையும் குடும்பம் என்றும் நிலைப்பது!   பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தோம் பிணமாகப் போகிறோம் என்ற பயத்தில் பதுங்கிக் கிடக்கிறோம்!   வருமுன் காப்போம் வந்த பின்னும் காப்போம் பகிராமல்   கண்ணுக்குத் தெரியாத நோய்மி,  கடவுளையும் கடந்து கதவடைக்காமல் காற்றில் கட்டுப்பாடில்லாமல்   விடியலில் எழுந்து விரைந்து கடந்து உழைத்துக் களைத்து உறவுகள் உறங்கிய பின்னே உடைந்து திரும்பி அடைந்து உறங்கி கடந்து கொண்டிருந்த நாம்   விடியலை மறந்து தலையணையாய், தம் மகவுக்குக் கைகளையும் பஞ்சணையாய் தம்முடலையும் பதிக்கும்.   எத்தனைக் ...
image-38668

நானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

நானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க சிலருள் ஒருவர் அறிஞர் முதுமுனைவர் ஒளவை து.நடராசன்; எந்தத் தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தக் குறிப்புமின்றிச் சிறப்பாகப் பேசும் சீரிய சிந்தனையாளர்; பட்டிமன்றங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக நாடறிந்த நல்லறிஞராகத் திகழ்பவர். நகைச்சுவையாகப் பேசும் பலரும் அந்தந்த நேரத்திற்கான ...
image-38661

தந்தை பெரியார் சிந்தனைகள் 11: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

தந்தை பெரியார் சிந்தனைகள் 11 (தந்தை பெரியார் சிந்தனைகள் 10 இன் தொடர்ச்சி)  1) சருவசக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து, சருவத்திலும் புகுந்து சருவத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராக இருந்தால் சருவத்தையும் ஒன்றுபோலவே சிருட்டிக்கலாமல்லவா?. வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வ சக்தியும் வியாபகமும் சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை. (2) கடவுள் சருவவியாபியாய் இருக்கும்போதும், மனிதனுடைய காரியங்களையும் கவனித்து வருகின்றவராய் ...
image-38655

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 1.0.0.நுழைவாயில்             “குற்றங்களைப் பெற்றெடுக்கும் நற்றாய், வறுமை”  என்பார் கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில். தீமைகளுக்கு எல்லாம் மூல காரணம் வறுமையே என்பது வறுமை பற்றிய ஓர் அருமைப் பொன்மொழி; ஒரு நன்மொழி.             இந்த நூற்றாண்டிலும் வறுமையின் விளைவுகளாகத் தற் கொலைகள், பட்டினிச் சாவுகள், குழந்தைச் சாவுகள், கொடிய நோய்கள் போன்ற பல்வேறு கொடுமைகள் உலகில் சில ...
image-38651

மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்

மகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் கோடை விடுமுறைக் கொண்டாட்டங்கள் மகுடை(கொரோனா) விடுமுறைத் திண்டாட்டங்கள் அலுவலகம் செல்லாமல் அறையில் முடங்கிக் கிடக்கும் அப்பா அடுப்பங்கரையில் விடுமுறை இன்றி உழைத்துக் கொண்டிருக்கும் அம்மா ஓயாமல் உளறிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி தேர்வு தொலையட்டும் என வேண்டாத தெய்வமில்லை வேடிக்கை பார்க்கும் புத்தகங்கள் வெளியில் செல்லலாம் என்றால் விரட்டுகிறது அரசாங்கம் முடங்கிக் கிடக்க சொல்லி முழங்குது தொலைக்காட்சி சிறகின்றிப் பறக்கும் கிருமி சிறையில் மக்கள் விடுமுறையிலும் ஒவ்வொரு வீடும் உயிர் விலங்குப் பூங்கா காப்பாற்றச்சொல்லிக் கதறினோம் கை கழுவி நகர்ந்தது அடுத்த அவசரச் செய்தி கோடைக் காலம் தொடங்கியது நீரை வீணாக்காதீர்! இவண் ஆற்காடு க குமரன் 9789814114