கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்
சோழ நாட்டின் எல்லை:
கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1)
பாண்டிய நாட்டின் எல்லை:
வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி. (2)
வடக்கே வெள்ளாறு, மேற்கே பெருவழி, தெற்கே தெளிந்த ...