நீயின்றி இயங்காது எம் உலகு!
பேசுவதை நிறுத்திக்கொண்டாய்.
'உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது'
என்று நினைத்துவிட்டாயா?
பேசிப் பேசி அலுத்து விட்டதா?
சொல்வதற்கு இருந்ததை எல்லாம்
சொல்லிவிட்டேன் என்றா?
உன் வார்த்தைகளின் எசமானர்கள்
நாங்கள் என்று உனக்குத் தெரியாதா?
மௌனம் கனத்துக்கிடக்கிறது
எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும்
அசைக்க முடியாத பாறையாய்...
வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின்
வரப்பில், செய்வது அறியாது
நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல
நாங்களும் காத்துக்கிடக்கிறோம்
கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக.
கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன்
என்ற கிழவனை, ...