போற்றிவளர்த்த பெருமரங்களின் கிளைகளிலே
தேனடையால் வீடுகட்டிக் கூடிவாழுந் தேனீக்கள்
குடைக்கூலியென சிந்திவிடுந் தேனொழுக,
ஒழுகுகின்ற தேனோடு போட்டியிட்டு,
பழமரமும் தன்கனியை தான்பிழிய,
தேனோடு தீங்கனிச்சாறும்
ஒட்டி வெட்டி சொட்டி அங்கே
கட்டி தரும் கரும்பு வயலுக்கு
வாய்க்காலாய் ஓடிவிழ,
கருப்ப வயலின் அண்டையிலே,
தடஞ்சாலி நெல்லெங்கும்
தளதளவென வளர்ந்திருக்க,
அதைத்தடுக்கும் களையதனைக்
களைந்தெடுக்கும் நீலவிழி நங்கையரின்
கைச்சினத்தை கண்டஞ்சி, சாலிநெல்லுக்குக்
களையாக வளர்ந்திருந்த குவளை மலர்களெல்லாம்
ஓடி, அண்டைக்குளத்திற்குள் ஒளிந்திருந்தாலும்,
புணர்ச்சியின் உச்சத்தில் சிவந்திருக்கும் கண்கள்போலச்
சிவந்திருந்த அந்த மலர்களின் அழகில் மயங்கிய
செஞ்சாலிநெல்லும் ...