(அதிகாரம் 023. ஈகை தொடர்ச்சி)
01. அறத்துப் பால்
02.இல்லற இயல்
அதிகாரம் 024. புகழ்
அழியும் உலகில், அறம்செய்து,
அழியாப் புகழைப் பெறுதல்.
ஈதல், இசைபட வாழ்தல், அதுஅல்லது,
ஊதியம் இல்லை உயிர்க்கு.
கொடுத்தலும், கொடுத்தலால் வரும்
புகழுமே, உயிர்வாழ்வின் பயன்கள்.
உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்(கு)ஒன்(று),
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
புகழ்வார் புகழ்ச்சொற்கள் எல்லாம்,
கொடுப்பார்மேல், வந்து நிற்கும்.
...