மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும் காலம் இது. ஆற்றல் வாய்ந்த இருபால் இளைஞர்கள், நாட்டு மக்களின் உரிமைக்காகத் தங்கள் உயிர்க்கொடையை அளித்ததை நினைவுகூர்ந்து போற்றும் காலம் இது. உலகின் தொன்மையான இனம், தனக்கே உரிய நிலப்பரப்பில், அடிமைப்பட்டு, அல்லல்பட்டு, துன்பப்பட்டுத், துயரப்பட்டு, நிலம் இழந்து, வளம் இழந்து, உற்றார் உறவினர் இழந்து, தாங்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ...