எழுத்துப்படலம்
- பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழின் தொடர்ச்சி)
நூன்மரபு
3. அவற்றுள்
அ, இ,உ,
எ, ஒ என்னும் அப்பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப
4. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ
ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப
பன்னிரண்டு உயிர்களையும் குற்றெழுத்து நெட்டெழுத்து ...