மொழி உரிமைப்பேரணி, தை 11, 2046, சென்னைக் கடற்கரை
காங்.ஆட்சியை முடித்த இலக்குவனார் வைத்த முதல் தீ – தினமலர்
பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாட முதல்வர் கடும் எதிர்ப்பு
பள்ளிகளில், சமற்கிருத வாரம் கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, முதல்வர் செயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அதற்கு மாற்றாக, அந்தந்த மாநிலத்தின் மொழி மற்றும் பரம்பரை அடிப்படையில், விழா கொண்டாட வழி செய்யலாம்’ என, அறிவுறுத்தி யுள்ளார். இது குறித்து, அவர் தலைமையாளருக்கு எழுதியுள்ள மடலில், மத்திய மனிதவளத் துறையின், பள்ளிக்கல்வி – எழுத்தறிவுத் துறையின் செயலர், ஆகத்து, 7 ஆம் நாள் முதல், 13 ஆம் நாள் வரை, சமற்கிருத வாரம் கொண்டாடும்படி, அனைத்து மாநில அரசு தலைமைச் செயலர்களுக்கு, மடல் எழுதியுள்ளதை அறிந்தேன்….
அங்கே இந்தி இங்கே சமற்கிருதம் ஒற்றை ஆயுதத்தின் இரு முனைகள்
– அண்ணா விருதாளர் இரா.உமா பிற மொழி ஆதிக்கத்திற்குச் சிறிதும் இடம் கொடுக்காத மண் தமிழ்நாடு. மொழியை உயிராகக் கருதி, மொழிக்காக உயிரையும் துறக்கத் துணிந்தவர்கள் தமிழர்கள். இந்தித் திணிப்பை, தமிழ்நாடு எதிர்த்த எழுச்சி மிகு வரலாற்றை, வடநாடுகள் வாய்பிளந்து பார்த்தன. இப்போதுதான் அவை சற்றே உறக்கம் கலைத்திருக்கின்றன. இன்றைக்கும் மோடி தலைமையிலான பா.ச.க. அரசு இந்தியின் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட முயலும்போது, இந்தியாவில் தமிழ்நாட்டின் குரலே ஓங்கி ஒலிக்கிறது. 1938, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதியாக,…
இந்தி ஒழிக! – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ்வாழ்க தமிழ்வாழ்க என்று சொன்னான் தாமரையின் வாய்மலர்ந்து தேனைப் பெய்தான்; தமிழ் இதுபார் இன்றுதன் உள்ளங் காட்டி, தன்னுயிரில் அதுகாட்டி, என்றன் தோளை அமிழ்திதுவர எட்டியா என்று தொட்டாள் அமிழ்தென்றேன் ஆம்என்றேன் மகிழ்ந்து நின்றேன் கமழ்இமை கனியிதழும் தந்தாள் உண்டேன் கண்திறந்தேன் வேறொருத்தி வருதல் கண்டேன். தமிழ்வீழ்க தமிழ்வீழ்க என்று சொன்னாள் தமிழ்க்காதில் ஈயத்தை உருக்கி வார்த்தாள் தமிழில்லை என்றுதன் உளத்தைக் காட்டி தன்னுயிரிற் பகைகாட்டி என்றன் தோளை அமிழ்திதுவா எட்டியா என்று தொட்டாள் அப்பட்டம் எட்டிக்காய் அடியே என்றேன் உமிழ் இந்தி நான்…
வேங்கையே எழுக! – பாவேந்தர் பாரதிதாசன்
இந்தித் திணிப்புச் சரியல்ல! அமைதி வேண்டும் நாட்டினிலே அன்பு வேண்டும் என்பார் ஆழ மடுவில் நீரைக் கலக்க வேண்டாம் என்று சொல்வார். தமிழகத்தில் இந்தி திணிக்கச் சட்டம் செய்தார் அவரே சாரும் குட்டையில் எருமை மாட்டை தள்ளுகின்றார் அவரே! சுமக்க வேண்டும் இந்தியினைப் பொதுமொழியாய் என்பார்; தொலைய வேண்டும் எதிர்ப்புக் கூச்சல் தொலைய வேண்டும் என்பார்; தமிழ்மொழியை அழிக்க வேண்டும் என்றவரும் அவரே தமிழகத்திலே புகுந்த சாக்குருவிகள் அவரே!
இறுதிவரை இந்தியை எதிர்ப்பேன் – பேரறிஞர் அண்ணா
சென்னைக் கடற்கரையிலே செந்தமிழ் காக்கச் சிறை சென்று மீண்ட அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு. இந்தி ஒழியும் வரைப் போராட்டம் நீடிக்கும். சூன் 14ஆம் நாள்: கன்னித் தமிழ்க்காவலனின் போர் முழக்கத்தைச் செவிமடுக்க வெள்ளமென மக்கள் கூட்டம் திரண்டெழுந்தது. தலைநகரிலே தண்டமிழ் காக்கும் தனிப்பெருந் தலைவனுக்கு வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு. 1965 வரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதின் நன்னோக்கத்தைப் பற்றி அன்று எழுதினேன். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று, 1965ஆம் ஆண்டிலே நாம் முடிவு எடுக்குங்கால், நம்முடைய போராட்டம், நேருபெருமகனாரின் கண்களுக்குப் புலனாகும்; அவருடைய…
இந்தியைப் பற்றிய சொல்லும் செயலும் – பேராசிரியர் சி.இலக்குவனார்
சென்ற இதழில் அலுவலக நேரத்திலேயே இந்தி மொழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்பின்னர் வெளிவந்துள்ள இந்திய அரசு அறிக்கை ஒன்றில் அலுவலக நேரமல்லாத காலத்திலேயே இந்திமொழிப் பயற்சி பெறுமாறு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (At present classes are being conducted in many departments of the Union Government outside office hours to enable non-Hindi speaking people to learn Hindi) இக்குறிப்பில் ‘எல்லா அலுவலகங்களிலும்’ என்று குறிப்பிடாமல் ‘பல அலுவலகங்களில்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. ஆகவே…
எரியும் நெருப்பில்… – மு. தங்கராசு
‘இந்தி, இந்திய மக்களில் பெரும்பாலோர் பேசும் இலக்கிய மொழிகளுள் ஒன்றன்று. இந்திய மொழிகளுள் சிறுபான்மையோர் பேசும் சிறு இலக்கிய, இலக்கண வளமற்ற மொழியேயாகும். எனவே இந்தி மொழி பேசுவோர் அம்மொழியைப் பேசாப் பகுதிகளில் வாழ்கின்ற (குறிப்பாகத் தென்னகத்து) மக்களின் இசைவையும் நல்லெண்ணத்தையும் நாட்டின் ஒருமை உணர்வு கருதிப் பெறல்வேண்டும். இவ்வாட்சி மொழியேற்பாடு இன்றோடு முடிவுறும் நிலையற்ற செயலன்று இக்காலத்தினரால் வரும் காலத்தினருக்காகச் செய்யப்படும் நிலைபெற்ற செயலாகும். எனவே, இதனை இந்தி ஆர்வலர் எவரும் மறக்கலாகாது’ என்று இந்திய அரசலமைப்பு’ (Indian Constitution) என்ற நூலில்…
தமிழுக்குக் கல்லறை கட்டப்பட்டுவிட்டது…? – புலவர் வி.பொ.பழனிவேலன், பி.ஓ.எல்
‘இந்தி’ கட்டாயமில்லை என்று நடுவண் அரசும் அதற்கு ஒத்து ஊதிக் கொண்டு தமிழ்நாட்டு அரசும் (இல்லை, தப்பு, தப்பு, சென்னை ராச்யமும்) இந்தியைத் தமிழ்நாட்டில் நுழைக்கும் பணியில் வெற்றி பெற்றுவிட்டன. 1. தமிழ்நாடு என்று பெயரிடத் தமிழக அரசு மறுத்துவிட்டது. அமைச்சர் ஒருவர், ‘மெட்ராசு ஃச்டேட்’ என்பது இரண்டு ஆண்டுக்கு முன்னரே எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது; ஆதலால் அது தீர்ந்துபோன செய்தி; இனி அதைப்பற்றிப் பேசத் தேவையில்லை என்று வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். 2. தமிழ் நாட்டுக் கல்விக் கூடங்களில் பாடம் பயிற்று மொழியாகவிருக்கத்…
‘‘பெரும்பாலோர் மொழி இந்தி’’ என்பது உண்மைக்கு மாறுபட்டது – மே.சி.சிதம்பரனார்
‘‘பாதிக்குமேலானவர்கள் பேசுவதால் இந்தியைத் தேசிய மொழியாக்குவதில் நியாயமிருக்கிறது’’ -‘‘மொரார்சி’’ 28-3-64, காஞ்சிபுரம். இந்தி, தனிமொழியா? பழமை மொழியா? சொல்வளம், பொருள் வளமுண்டா? எழுத்து வனப்புண்டா? இலக்கிய விலக்கணங்களுண்டா? அறிவியல் நூல்களுண்டா? இந்தி படித்து ஒரு விஞ்ஞானியாகலாமா? ஒரு மருத்துவனாகலாமா? ஒரு பொறியியலனாகலாமா? ஒரு வழக்கறிஞனாகத்தானாக முடியுமா? அல்லது இந்தியைக் கொண்டு பிறநாட்டானோடு கலந்து பேசவியலுமா? என்ற கேள்விகட்கெல்லாம் விடைகள் இல்லையென்பது ஒப்பமுடிந்ததாய்விட்டது. இறுதிக்காரணம்? பெரும்பான்மையினர் பேசப்படுவதென்பதைத் திட்டமிட்டுத் ‘‘திடீர்ப்புளுகு’’கள் மூலம் உயர்த்திக்கொண்டே வருகிறார்கள். பொய்மையெனத் தயங்காது அதனையே மேன்மேலும் உறுதியுடன் பேசிவந்தால்…
இந்தி எதிர்ப்பில் சிறை சென்ற செம்மல்கள், 1964
தாய்த் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்புப் போரில் வெஞ்சிறை புகுந்துள்ள தமிழ் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர் கே.ஏ.மதியழகன், எம்.எல்.ஏ, பேராசிரியர் க.அன்பழகன், எம்.எல்.ஏ, தோழர் எசு.சே. இராமசாமி, எம்.எல்.ஏ. தோழர் விழுப்புரம் சண்முகம், எம்.எல்.ஏ, தோழர் ஆ.தங்கவேலு, எம்.எல்.ஏ, தோழர் என் இராசாங்கம், எம்.எல்.ஏ, தோழர் அன்பில் தர்மலிங்கம் எம்.எல்.ஏ, தோழர் எம்.எசு.மணி, எம்.எல்.ஏ, தோழர் து.ப.அழகமுத்து, எம்.எல்.ஏ, தோழர் தியாகராசன், எம்.எல்.ஏ, தோழர் வெங்கலம் எஸ்.மணி, எம்.எல்.ஏ, தோழர் நாராயணன், எம்.எல்.ஏ, தோழியர் செகதாம்பாள் வேலாயுதம் எம்.எல்.ஏ, – குறள்நெறி: ஆனி…