வேங்கையே எழுக! – பாவேந்தர் பாரதிதாசன்
இந்தித் திணிப்புச் சரியல்ல!
அமைதி வேண்டும் நாட்டினிலே
அன்பு வேண்டும் என்பார்
ஆழ மடுவில் நீரைக் கலக்க
வேண்டாம் என்று சொல்வார்.
தமிழகத்தில் இந்தி திணிக்கச்
சட்டம் செய்தார் அவரே
சாரும் குட்டையில் எருமை மாட்டை
தள்ளுகின்றார் அவரே!
சுமக்க வேண்டும் இந்தியினைப்
பொதுமொழியாய் என்பார்;
தொலைய வேண்டும் எதிர்ப்புக் கூச்சல்
தொலைய வேண்டும் என்பார்;
தமிழ்மொழியை அழிக்க வேண்டும்
என்றவரும் அவரே
தமிழகத்திலே புகுந்த
சாக்குருவிகள் அவரே!
Leave a Reply