இனப்படுகொலையாளன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

இனப்படுகொலைகாரன் பட்சேவை அழைப்பதற்காக, நரேந்திர(மோடி)  தென்ஆசியநாட்டுத் தலைவர்களை அழைத்துத் தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டு தமிழர்களைச் சிறுமைப்படுத்தி விட்டார். இதற்கு உலகெங்கும்  எதிர்ப்புகள் எழுந்தன. எடுத்துக்காட்டிற்காகச் சில ஆர்ப்பாட்டங்களின் ஒளிப்படங்கள்.

யாழ் பல்கலையில் தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை ! ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை !! இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.. தமிழர்களின் வீரத்திற்கு இணையேது?  

நாம் இரண்டல்ல ஒன்று – செந்தமிழினி பிரபாகரன்

நாம் இரண்டல்ல ஒன்றெனச் சொல்லுங்கள். கடற்கோள்கள் பிரித்த தமிழாண்ட தேசங்கள்.. அடிமை தேசங்களாய்… அவனியில் இன்று.. ஆயினும் உணர்வழியா இனமாய்.. ஒன்றெனச் சொல்லுங்கள். உரத்துச் சொல்லுங்கள்.. எங்கள் இனம் இன்று ஒன்றானதென்று! இல்லை என பார்ப்பவர்கள் பகைவர்கள்! . பிரித்துப் பார்ப்பவர்கள் பித்தர்கள்…!! ஒன்றான மாந்தர் ஒன்றுபட்ட இனம்.. ஒற்றை தாய் மொழி.. கடல் பிரித்த தேசங்கள்.. இரண்டானாலும் தமிழினம் என்றும்… ஒரு குடி காண்! ஒற்றுமை ஒன்றே உயர்வெனக் கொண்ட வேற்றுமை இல்லா தமிழர் நாம்!.. ஒன்றே எம் இலக்கு. விடுதலை எம்…

எல்லாளன் ஆள்வார் – தமிழ் மகிழ்நன்

சிங்களன்நீ தமிழன்நான் தீங்கெமக்குச் செய்தாய்! சிங்களமே உன்நாடு! நாடெமெக்கு ஈழம்! கங்குலென்றும் பகலென்றும் பாராது நின்று காட்டினிலும் களத்தினிலும் கடுந்துன்பம் வென்று பொங்கிவரும் காட்டாறு போல்புலிகள் வருவார்! புத்துயிரை ஊட்டியினி புதுயீழம் பெறுவார்! மங்கிடாத புகழுடைய தமிழீழ நாடு மாவீரர் படைத்திடுவார் நடுங்கியினி ஓடு! முள்ளி வாய்க்கால் போர்முனையில் முழுவெற்றி என்றே மூர்க்கன்நீ முதிர்ச்சியின்றி முழங்குகிறா யின்று! கள்ளரைப்போல் வல்லரசர் களமாட வென்றாய்! கதறிநீயும் அழுதலறித் தோற்றோடி வீழ்வாய்! வெள்ளம்போல் மாவீரர் விளைகின்ற மண்ணில் வீணன்நீ வெகுவிரைவில் வீழ்ந்தழிவாய் எண்ணு! துள்ளுகின்ற சிங்களனுன் துடுக்குயினி…

எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! – ஆதிரை

  முனகல்களோடு புலர்ந்து கொண்டிருந்த பொழுதை மூர்ச்சையாக்கி புதைத்த அந்த நாள் பால் குடிப்பதற்காக, சடலத்தின் உடலை உறிஞ்சிய பச்சை மண்ணின் வறண்ட அதரங்கள் கனவுகளைச் சுமந்த பாவாடை மலர்களின் நீலம் பாய்ந்த நயனங்கள் வெட்டிய நெஞ்சின் முட்டிய உறுதியின் அடையாளமாய் கருகிய மீசைகள் சுருங்கிய தோலும் சுருங்காத கனவும் தேக்கிய  இதயங்கள் எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! மரணம் அடுக்கி மாளிகை கரசேவக இனவெறிப் பேய்கள் குருட்டு மொழியின் கதறல்களுக்கு இன்னும் வெளிச்சமிடாத பச்சைத் துரோகங்கள் மே 18 சிந்திய செந்துளிகள் அமைதியடையும்…

ஈழத்தாயே பொறுத்திடு! – துயிலகா

  ஈழத்தாயே பொறுத்திடு, தாயகம் மீட்டெடுப்போம் சற்றே பொறுத்திடு! தமிழரை ஒழிக்கும் சிங்களத்தின் செய்கை, நீண்டகாலம் நீடிக்காது, நிலைத்து நிற்போம் தமிழர் நாம்! முள்ளிவாய்க்கால் முடிந்ததாம், போர் தீர்ந்ததாம், இலங்கை வென்றதாம், தமிழர்க்கு விடுதலையாம், ஆயினும் எம்வாழ்வில் தேற்றமில்லை, சுதந்திரமாய் வாழ இங்கு வழியும் இல்லை! சிங்களத்தின் குடிகள் சொகுசாய் எம் வீட்டினுள், நாங்களோ வாழ வழியின்றி வீதியில்! எம்பெண்களை வற்புறுத்தி இராணுவத்தில் வேலை, தாயாவதைக்கூட தடுக்கும் ஈரமற்ற இன ஒடுக்கம்! ஐக்கிய நாடுகளோ அமெரிக்காவின் நட்பில், அமெரிக்காவின் பார்வையிலோ இலங்கையில் சமாதானம்! கேட்பார்…