உ.வே.சா.வின் என் சரித்திரம் 4
(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 3 இன் தொடர்ச்சி) அத்தியாயம்-2என் முன்னோர்கள் ‘பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணியிருக்கிறேன்; அதற்கு மகாராசா உதவி செய்ய வேண்டும்’ என்று ஒருவர் ஓர் அரசரை வேண்டிக் கொண்டாராம். அந்த அரசர் அதற்காக நிறையப் பொருளுதவி செய்தார். அந்தத் தொகையைப் பெற்று அவர் தம் வீட்டில் இரண்டே அந்தணர்களை அழைத்து அவர்கள் திருப்தி யடையும்படி போசனம் செய்வித்து மிகுதியான தட்சிணையும் கொடுத்து அனுப்பினார். அயல் வீட்டிலுள்ள ஒருவர் அவருடைய விசயங்களை நன்கு அறிந்து கொண்டவராதலின் அவரை, “பதினாயிரம்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 3
(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 2/4 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் 3 அத்தியாயம் 1 – எங்கள் ஊர் கலெக்டர் துரையினுடைய பார்வை அண்ணா சோசியர் மேல் விழுந்தது. அவருடைய அங்க அமைப்பையும் (இ)ரிசபம் போன்ற நடையையும் முகத்தில் இருந்த ஒளியையும் கண்டபோது கலெக்டர் துரைக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று. திடீரென்று அவரை அழைக்கச் செய்து சிரசுதேதார் மூலமாக அவரைச் சில விசயங்கள் கேட்கலானார். கலெக்டர் :-உமக்குப் படிக்கத் தெரியுமா?சோசியர் :-தெரியும்.கலெக்டர் :-கணக்குப் பார்க்கத் தெரியுமா?சோசியர் :-அதுவும் தெரியும். நான் சோசியத்தில்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 2/4
(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 1/4 தொடர்ச்சி) என் சரித்திரம் மகாமகோபாத்தியாய முனைவர் உ. வே. சாமிநாதர் அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 2/4 இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதான புரத்துக்கும் ‘எங்கள் ஊர்’ என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புகள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகசுதர்கள்…
என் சரித்திரம்-உ. வே. சா. : அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 1/4
(உ.வே.சா.வின் என் சரித்திரம், முகவுரை தொடர்ச்சி) என் சரித்திரம்மகாமகோபாத்தியாய முனைவர் உ. வே. சாமிநாதர்அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 1/4 சற்றேறக்குறைய இருநூறு வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர் சமசுதானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டு களித்தும், தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடையில், தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து கல் தூரத்திலுள்ள பாபநாசத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போசனம்…
உ.வே.சா.வின் என் சரித்திரம், முகவுரை
என் சரித்திரம் சிவமயம்முகவுரை திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்“திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீமிக்கஉருவேயென் னுறவேயென் னூனே ஊனி னுள்ளமே யுள்ளத்தி னுள்ளே நின்றகருவேயென் கற்பகமேகண்ணே கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய் காவாய்அருவாய வல்வினை நோயடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையு மமரரேறே.”திருச்சிற்றம்பலம் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு தமிழன்பர் பலர் பாராட்டி வரும்போது எந்தையாரவர்கள் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் திரு மீனாட்சிசுந்தரம் (பிள்ளை)யவர்களை…
உ.வே.சா.வின் என் சரித்திரம், பதிப்புரை
உ.சா.வின் என் சரித்திரம் பதிப்புரை ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனைபாடு பட்ட பதத்தெளி வெத்தனை பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனைநாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனைகூட நோக்கினர்க் காற்றின வெத்தனை கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே! – இரா.இராகவையங்கார்தமிழ்த்தாத்தா அறிஞர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது. இந்நூலைக்…