தமிழ்க்கணினி : பன்னாட்டுக் கருத்தரங்கம்

    திருச்சிராப்பள்ளியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கலை-அறிவியல் கல்லூரியில்(நவலூர் குட்டப்பட்டு) தமிழ்த்துறையின் சார்பாக தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்  இருநாள் நடைபெற்றது. முதல் நாளான 27-03-2014 அன்று காலையில் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர்(பொ.) முனைவர் உண்ணாமலை வரவேற்புரையாற்றினார். பாரதிதாசன்  பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் சுப்பையா தலைமை தாங்கினார்.  பாரதிதாசன் பல்கலைககழகப் பதிவாளர் முனைவர் இராம்கணேசு முன்னிலையுரையாற்றினார். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன் மையப்பொருளுரையாற்றினார்.  தமிழ்நாடு  தேசியச் சட்டப்பள்ளி துணைவேந்தர் முனைவர் ந.முருகவேல் வாழ்த்துரை வழங்கினார். …

பன்னாட்டுக் கருத்தரங்கம்-தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள்

  அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம்.   தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்ச்சு 27,28 – 2014 அன்று திருச்சிராப்பள்ளியில் எமது கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கணினி தொழில்நுட்ப அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன. இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன். தொடர்பிற்கு முனைவர் துரை.மணிகண்டன் அலைபேசி எண்: 9486265886 http://www.manikandanvanathi.blogspot.in/2014/01/blog-post.html