ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–11

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 10 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 11 நெய்தல்‌ நிலம்‌ தொடர்ச்சி பாக்கம் கடற்கரைச்‌ சிற்றூர்கள்‌ பாக்கம்‌ என்று பெயர்‌ பெறும்‌. சென்னை மாநகரின்‌ அருகே சில பாக்கங்கள்‌ உண்டு. கோடம்‌ பாக்கம்‌, மீனம்‌ பாக்கம்‌, “வில்லி பாக்கம்‌ முதலிய ஊர்கள்‌ நெய்தல்‌ நிலத்தில்‌ எழுந்த பாக்கம்‌ குடியிருப்பேயாகும்‌. சில காலத்திற்கு முன்‌ தனித்‌ தனிப்‌ பாக்கங்களாய்ச சென்னையின்‌ அண்மையிலிருந்த சிற்றூர்கள்‌ இப்போது அந்நகரின்‌ அங்கங்க ளாய்விட்டன. புதுப்‌ பாக்கம்‌, புரசை பாக்கம்‌, சேப்பாக்கம்‌, நுங்கம்‌ பாக்கம்‌…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–10

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 9 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 10 நெய்தல்‌ நிலம்‌ தமிழ்‌ நாடு. நெடிய கடற்கரை யுடையது. முன்னாளில்‌ “சோழ நாட்டுக்‌ கடற்கரை, சோழ மண்டலக்கரை என  வழங்கிற்று. அஃது ஐரோப்பியர்‌ நாவில்‌ சிதைந்து கோரமண்டல்‌ கரையாயிற்று. பாண்டி நாட்டுக்‌ கடலில்‌ நினைப்பிற்‌ கெட்டாத. நெடுங்‌ காலமாக நல்‌ முத்து விளைந்தமையால்‌ . அக்‌ கரை முத்துக்கரை என்று பிற நாட்டாரால்‌ ‘குறிக்கப்பட்டது.100 சேர நாட்டுக்‌ கடற்கரை, மேல்‌ கரை என்று பெயர்‌ பெற்றது. கரை “கடற்கரையில்‌…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 9

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 8 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 9 மருத நிலம்‌ தொடர்ச்சி கேணி, கிணறு     இன்னும், ஊற்று நீரால் நிறையும் கேணியும் கிணறும் சில ஊர்களைத்தோற்றுவித்துள்ளன. சென்னை மாநகரிலுள்ள  திருவல்லிக்கேணியும்,நெல்லை நாட்டிலுள்ள நாரைக் கிணறும் இவ்வுண்மைக்குச் சான்றாகும்.  நிலம்     இங்ஙனம் ஆற்று நீராலும், ஊற்று நீராலும் ஊட்டி வளர்க்கப்படும்நிலத்தின் தன்மையை உணர்த்தும் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்கள்பலவாகும். நிலம் என்னும் சொல்லை நன்னிலம்  என்ற ஊர்ப் பெயரிற்காணலாம். அப்பெயரிலுள்ள அடைமொழி அந்நிலத்தின் வளத்தைக்குறிப்பதென்பர்.  புலம்    …

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 8

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 7 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 8 மருத நிலம்‌ தொடர்ச்சி  சமுத்திரம்     சில ஊர்ப் பெயர்களில் சமுத்திரம் என்ற வடசொல் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டு மன்னரும் செல்வரும் உண்டாக்கிய பெரிய ஏரிகள், கடல் என்றும், சமுத்திரம் என்றும், வாரிதி என்றும் புனைந்துரைக்கப் பெற்றன.77 இராசராச சோழன் வெட்டிய பெருங்குளம் ஒன்று சோழ சமுத்திரம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.78 எனவே, தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் உள்ள சமுத்திரம் என்னும் சொல், பெரும்பாலும் ஏரியின் பெயரென்று கொள்ளலாகும். நெல்லை…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 7

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 6 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 7 மருத நிலம்‌ தொடர்ச்சி ஓடை     இயற்கையான நீரோட்டத்திற்கு ஓடை என்பது பெயர். மயிலோடைஎன்னும் அழகிய பெயருடைய ஊர் நெல்லை நாட்டிலும், பாலோடைஇராமநாதபுரத்திலும், செம்போடை தஞ்சை நாட்டிலும் விளங்கக் காணலாம்.  மடை     கால்வாய்களிலும், குளங்களிலும் கட்டப்பட்ட மதகுகள் மடையென்று பெயர் பெறும். மடையின் வழியாகவே, தண்ணீர் வயல்களிற் சென்று பாயும். இத் தகைய மடைகள் அருகே சில ஊர்கள் எழுந்தன. நெல்லை நாட்டிலுள்ள பத்தமடை என்னும் பத்தல்…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 6

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 5 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 6 மருத நிலம்‌ தொடர்ச்சி பெரும்பாலும் தென்னாட்டில் உள்ள நதிகள் மலைகளிலே பிறக்கும். அவ்வாறு பிறவாமல் சமவெளியாம் முல்லை நிலத்தில்தன்னூற்றாகப் பொங்கி எழுந்து, கயமாகப் பெருகிச் சிறு ஆறாக ஓடும் சிறப்பினைக் கண்டு, அதற்குக் கயத்தாறு என்று முன்னையோர் பெயரிட்டார்கள். இந் நாளில் அப்பெயர் ஆற்றின் பெயராக வழங்காவிடினும் அவ்வாற்றங் கரையிலுள்ள கயத்தாறு என்ற ஊரின் பெயராகக் காணப்படுகின்றது.60      ஆற்றின் அருகே யமைந்த ஊர் ஆற்றூர் எனப்படும். தமிழ்…

ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 5

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 4 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 5 மருத நிலம்‌ ஆறு நிலவளமும்‌, நீர்வளமும்‌ உடைய தமிழ்‌ நாட்டில்‌ நினைப்பிற்கு எட்டாத காலந்‌ தொட்டுப்‌ பயிர்த்தொழில்‌ பண்புற நடந்து வருகின்றது. பண்டைத்‌ தமிழர்‌ ஆற்று நீர்‌ பாயும்‌ அவல பரப்பைப்‌ பண்படுத்திப்‌ பயிர்‌ செய்து மருத நிலமாக்கினார்கள்‌. அருமந்த பிள்ளையைப்‌ பாலூட்டி வளர்க்கும் தாய்போல் மருத நிலத்தை நீரூட்டி வளர்ப்பது நதியென்று கண்டு அதனைக் கொண்டாடினார்கள்.49 காவிரியாற்றைப்‌ பொன்னியாறென்று புகழ்ந்தார்கள்‌; வைகையாற்றைப்‌  “பொய்யாக்‌ குலக்கொடி” 50 என்று…

தமிழ்நாடும் மொழியும் 3 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 2 தொடர்ச்சி) 2. தமிழகம் முத்தமிழ் வளர்த்த மூவேந்தரின் முக்குடைக் கீழ் விளங்கிய நந்தம் செந்தமிழ் நாட்டின் எல்லை, அங்கு விண்ணையும் முட்டிக் கொண்டு நிற்கும் மாமலைகள், அவற்றிலிருந்து நெளிந்து ஓடும் தெண்ணீராறுகள், அவை பாயும் நிலப்பரப்பு, நிலப்பிரிவுகள் ஆகியவற்றை ஈண்டு பார்ப்போம். எல்லை தொல்காப்பியம் முதல் பாரதியார் நூல்கள் வரை இடைப்பட்ட அத்தனை இலக்கியங்களிலும் தமிழகத்தின் எல்லைகள் நன்கு பேசப்பட்டுள்ளன. தண்டமிழ் வழங்கும் தமிழகத்தின் எல்லை இன்று போலன்றிப் பண்டு பரந்து கிடந்தது. சியார்சு எலியட்டு என்பவரின் ஆராய்ச்சியின்படி மிக…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 4

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 3 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 4 நாவல் நாவல்‌ என்பது ஓர்‌ ஊரின்‌ பெயர்‌. தேவாரம்‌ பாடிய மூவருள்‌ ஒருவராகிய சுந்தரர்‌ அவ்வூரிலே பிறந்தருளினார்‌. ‘அருமறை நாவல்‌ ஆதி சைவன்‌ என்று பெரிய புராணம்‌ கூறுமாற்றால்‌ அவர்‌ பிறந்த ஊரும்‌ குலமும்‌ விளங்கும்‌. அந்நாவல்‌, சுந்தரர்‌ தோன்றிய பெருமையால்‌ திருநாவல்‌ ஆயிற்று. ஈசனால்‌ ஆட்‌ கொள்ளப்பெற்ற சுந்தரர்‌ அவரடியவராகவும்‌, தோழராகவும்‌ சிறந்து வாழ்ந்த நலத்தினை அறிந்த பிற்காலத்தார்‌ அவர்‌ பிறந்த ஊரைத்‌ திருநாவல்‌ நல்லூர்‌ என்று…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 3

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 2 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 3 சோலை சோலை என்ற சொல்லும்‌ சில ஊர்ப்‌ பெயர்களில்‌ உண்டு. மதுரையின்‌ அருகேயுள்ள அழகர்‌ கோவில்‌ பழங்காலத்தில்‌ திருமால்‌ இருஞ்சோலை என்று பெயர்‌ பெற்றிருந்தது.32 பழமுதிர்‌ சோலை  முருகப்‌ பெருமானது படைவீடுகளில்‌ ஒன்று என்று திருமுருகாற்றுப்படை கூறும்‌.33 சேலம்‌ நாட்டில்‌ தலைச்சோலை என்பது ஓர்‌ ஊரின்‌ பெயர்‌. திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலை என்னும்‌ ஊர் உள்ளது. தோப்பு மரஞ்‌ செடிகள்‌ தொகுப்பாக வளரும்‌ இடம் தோப்பு என்று அழைக்கப்படும்‌.34  தோப்பின்‌…

ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 2

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 2 பழங்காலத்தில்‌ தமிழ்‌ நாட்டில்‌ மரம் செறிந்த காடுகள்‌ மலிந்திருந்தன. பண்டைத்‌ தமிழரசர்களாகிய கரிகால்‌ வளவன்‌ முதலியோர்‌ காடு கொன்று நாடாக்கினர்‌ என்று கூறப்படுகின்றது.19 ஆயினும்‌, அந்‌ நாளில்‌ இருந்து அழிபட்ட காடுகளின்‌ தன்மையைச்‌ சில ஊர்ப்பெயர்களால்‌, உணரலாம்‌. இக்காலத்தில்‌ பாடல்‌ பெற்ற தலங்கள்‌ என்று போற்றப்படுகின்ற ஊர்கள்‌ முற்காலத்தில்‌ பெரும்பாலும்‌ வனங்களாகவே இருந்தன என்பது சமய வரலாற்றால்‌ அறியப்படும்‌. சிதம்பரம்‌ ஆதியில்‌ தில்லைவனம்‌; மதுரை கடம்பவனம்‌; திருநெல்வேலி வேணுவனம்‌….

ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1

(ஊரும் பேரும் – முகவுரையும் நன்றியுரையும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 1. தமிழகமும்‌ நிலமும்‌ தமிழகம் பழம்‌ பெருமை வாயந்த பாரதநாட்டின்‌ தென்பால்‌ விளங்குவது தமிழ்நாடு. சேர சோழ பாண்டியர்‌ என்னும்‌ மூவேந்தரால்‌ தமிழகம்‌ தொன்றுதொட்டு ஆளப்பட்ட தென்பர்‌. பொதுவுற தமிழகம்‌ நோக்கும்பொழுது பழந்‌ தமிழகத்தில்‌ மேல்நாடு சேரனுக்கும்‌, கீழ்நாடு சோழனுக்கும்‌, தென்னாடு பாண்டியனுக்கும்‌ உரியன வாயிருந்தன என்பது புலனாகும்‌. இங்ஙனம்‌ மூன்று கவடாய்‌ முளைத்தெழுந்த தமிழகம்‌ மூவேந்தரது ஆட்சியில்‌ தழைத்தோங்கி வளர்ந்தது.*1 நால்‌ வகைப்பட்ட நிலங்கள்‌. தமிழகத்தில்‌ அமைந்‌திருக்கக்‌ கண்டனர்‌ பண்டைத்‌ தமிழர்‌.*2…