சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029 : தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

உ.வே.சா.வின் என் சரித்திரம் 71 : சரசுவதி பூசையும் தீபாவளியும்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 70 : சிலேடையும் யமகமும் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-43 சரசுவதி பூசையும் தீபாவளியும் நான் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்து சில மாதங்களே ஆயின.சித்திரை மாதம் வந்தேன் (1871 ஏப்பிரல்); புரட்டாசி மாதம் பட்டீச்சுரத்தில்இருந்தோம். இந்த ஆறு மாதங்களில் நான் எவ்வளவோ விசயங்களைத்தெரிந்து கொண்டேன். தமிழ் இலக்கியச் சம்பந்தமான விசயங்களோடுஉலகத்திலுள்ள பல வேறு வகைப் பட்ட மனிதர்களின் இயல்புகளையும்உணர்ந்தேன். செல்வத்தாலும் கல்வியாலும் தவத்தாலும் நிரம்பியவர்களைப்பார்த்தேன். அவர்களுள் அடக்கம் மிக்கவர்களையும், கருவத்தால் தலைநிமிர்ந்தவர்களையும் கண்டேன். உள்ளன்புடையவர்களையும், புறத்தில்மாத்திரம் அன்புடையவர்கள் போல நடிப்பவர்களையும்…

ஊரும் பேரும்65 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – 6. தமிழகம் – அன்றும் இன்றும்

(ஊரும் பேரும் 64 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – அருங்குன்றம் – தொடர்ச்சி) ஊரும் பேரும்6. தமிழகம் – அன்றும் இன்றும் முன்னொரு காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழ் மொழியே பரவியிருந்த தென்பது தக்கோர் கருத்து. அப் பழம்பெருமையை நினைந்து, “சதுர்மறை ஆரியம் வருமுன்சகமுழுதும் நினதானால்முதுமொழி நீ அனாதியெனமொழிகுவதும் வியப்பாமே” என்று மனோன்மணியம் பாடிற்று. அந்நாளில் கங்கை நாட்டிலும்,காவிரிநாட்டிலும் தாளாண்மை யுடைய தமிழர் வேளாண்மை செய்தனர்; வளம் பெருக்கினர்; அறம் வளர்த்தனர். கங்கைத் திரு நாட்டில் பயிர்த் தொழில் செய்த வேளாளர் இன்றும் தமிழகத்தில்…

வள்ளுவர் சொல்லமுதம் -3 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்

(வள்ளுவர் சொல்லமுதம் -2 : அ. க. நவநீத கிருட்டிணன் : உ. இறையருளும் நிறைமொழியும்-தொடர்ச்சி) ௩. மனையும் மக்களும் மனை என்னும் சொல் நாம் வாழும் இல்லத்தையும் இல்லிற்குத் தலைவியாகிய இல்லானையும் குறிப்பதாகும். மனைவி என்பது மனைக்குத் தலைவி என்ற பொருளைத் தரும். மனையை ஆளுபவள் மனையாள் எனப்பட்டாள். மனைவியுடன் கணவன் மனையில் வாழ்ந்து புரியும் அறமே மனையறம் எனப்படும். அதனையே இல்லறம் என்றும் இல்வாழ்க்கை என்றும் குறிப்பர். இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது ஒளவையாரின் அமுதமொழி. மக்கள் வாழ்வு நெறிகளே…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 32 : பிறமொழி புகுதல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை-தொடர்ச்சி) பூங்கொடி பிறமொழி புகுதல் நம்நாட் டகத்தே ஈயமிலாப் புன்மொழிதிணிப்பதற் கொருசிலர் செய்தனர் சூழ்ச்சி;துணுக்குற் றெழுந்தனர் தூயநல் மனமுளோர்;தாய்மொழி வளர்ச்சி தளர்ந்த இந் நாட்டில்நோய்என மடமை நுழைந்து பரந்தது; 85எழுத்தும் அறியார் படிப்பும் உணரார்கழுத்திற் பிறமொழி கட்டுதல் நன்றாே?என்றநல் லுரையை இகழ்ந்தனர் ஆள்வோர்;நெஞ்சங் கனன்றதுகன்றிய நெஞ்சங் கனன்றது; தமிழர்பொறுக்கும் அளவே பொறுப்பர், மீறின் 90ஒறுத்ததன் பிறகே ஓய்வும் உணவும்நினைவர் இதுதான் நெடுநாள் இயல்பு;கனலும் புனலும் கரைமிகின் தடுக்கஉலகில் ஒருபொருள் உளதென அறியோம்; மூக்கினை வருடின்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 -1020- தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

உ.வே.சா.வின் என் சரித்திரம் 70 : சிலேடையும் யமகமும்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-42 சிலேடையும் யமகமும் பட்டீச்சுரத்தில் இருந்தபோது பிள்ளையவர்கள் இடையிடையேகும்பகோணம் முதலிய இடங்களுக்குப் போய் வருவதுண்டு. அப்பொழுதுநானும் உடன் சென்று வருவேன். பட்டீச்சுரத்திலுள்ள ஆலயத்திற்கு ஒருநாள்சென்று தரிசனம் செய்து வந்தோம். அக்கோயிலில் தேவி சந்நிதானத்தில் சிரீகோவிந்த தீட்சிதரது பிம்பமும் அவர் பத்தினியாரது பிம்பமும் இருக்கின்றன.அவற்றை நாங்கள் கண்டு களித்தோம். தஞ்சையிலிருந்து அரசாண்ட அச்சுதப்பநாயக்கரிடம் அமைச்சராக இருந்து பல அரிய தர்மங்களைச் செய்தவர் சிரீகோவிந்த தீட்சிதர். அவர் பட்டீச்சுரத்து அக்கிரகாரத்தில் வசித்து…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 30 : தாமரைக்கண்ணி அறிவிப்பு-தொடர்ச்சி) பூங்கொடி முத்தக் கூத்தன் கல்லறை கலக்கந் தருசுடு காட்டில் நெஞ்சுரம்சேருவ தெங்ஙனம்: செப்புதி எனலும்,கூறுவென் கேண்மின் கூர்மதி யுடையீர்? 60மொழிக்குயிர் ஈந்தநல் முத்தக் கூத்தன்பளிக்கறைப் புதைகுழி பாங்குடன் மிளிரும்,அதனைக் காணின் அச்சம் தொலையும்,மதமுறு கொடியர் மனச்செருக் கொழிக்கநெஞ்சுரம் ஏறும், நிமிர்ந்து நடப்பீர்! 65வஞ்சனை மாக்கள் வண்டமிழ் மொழிக்குநஞ்சினை ஊட்ட நாட்டில் மறைந்துளார்;அவர்தம் கொடுஞ்செயல் அழித்திட வேண்டின்முத்தக் கூத்தன் கல்லறை முன்போய்நத்தித் தொழுதால் நரம்புரம் ஏறும், 70குருதியில் உணர்ச்சி கொதிக்கும், நும்மினப்பெருமையை அழிப்போர் பிறக்கிடச் செய்வீர்!நாடும்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 – 1020

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003-1009- தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 – 1020 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) ★

உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர் – தொடர்ச்சி) என் சரித்திரம் – அத்தியாயம் 41 தொடர்ச்சிஒரு செய்யுள் செய் இவ்வளவு சாக்கிரதையாக ஏற்பாடு செய்து கொண்டு விழிக்கும்ஆறுமுகத்தா பிள்ளையிடம் காலையில் நான் போய், “என் புத்தகத்தைக்காணவில்லை” என்று சொல்லுவேனானால் அவருக்குக் கோபம் வருமென்பதைநான் அறிவேன். ஆகையால் அவரிடம் சொல்லலாமென்று என் ஆசிரியர் கூறிய பின்பும், நான் பேசாமல் வாடிய முகத்துடன் அங்கேயே நின்றேன். ‘ஒரு செய்யுள் செய்யட்டும்’ சிறிது நேரத்திற்குப் பின் ஆறுமுகத்தா பிள்ளை துயில் நீங்கி எழுந்துஅவ்வழியே சென்றார்….

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.2 – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.1 – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி) தமிழர் பண்பாடு(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை) 1.முன்னுரை – தொடர்ச்சி சென்னைப் பல்கலைக்கழகத்தின், இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறைகளின் பேராசிரியராகிய முதுபெரும் அறிஞர் திருவாளர் எசு.கிருட்டிணசாமி ஐயங்கார் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த பண்டைத்தமிழ் அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் பற்றிய செய்திகள் அவ்வளவையும் துருவித் துருவி ஆய்ந்து வெளிப்படுத்தித் தம்முடைய பல்வேறு நூல்களில் திறன் ஆய்வு செய்துள்ளார், ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் பண்டைக்காலத்து மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 30 : தாமரைக்கண்ணி அறிவிப்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 29 : கல்லறை காண் காதை – தொடர்ச்சி) பூங்கொடிதாமரைக்கண்ணி அறிவிப்பு கோமகன் ஆயிழை இவள்மேற் கொண்டகாமந் தணிந்து கழிந்தனன் அல்லன்,படிப்பதும் இதனுள் பழுதுகள் புரியின் 30அடுத்தவர் ஒறுப்பர் ஆதலின் புறத்தே வருமிடைக் காண்பான் வழியிடை ஒதுங்கிஇருத்தலுங் கூடும் இதுநீர் ஒர்ந்துதிருத்தகு நல்லீர்! தெருவழிச் செல்லேல்பொழிலின் பின்புறம் பொருந்திய ஒருசிறு 35வழியுள தவ்வழி மருங்கிற் செல்லின்சுடுகா டொன்று தோன்றும்; ஆண்டுக்கடுநவை உறாஅது; கலங்கேல், அந்செறிதாண்டிச் செல்கெனத் தாமரைக் கண்ணி வேண்டி நின்றனள், விளங்கிழை அல்லி 40 அல்லி அஞ்சுதல் பினஞ்சுடு…