மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  42

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  41 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  16 அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை.      — திருக்குறள் முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த இடுப்புவாரை( ‘தோல் பெல்ட்’டை)க் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடிவிட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு தற்செயலாக ஏதோ காரியமாய் அரவிந்தன் அப்போது அங்கே வந்தான். அவன் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால் முருகானந்தத்தின் சினம் எந்த அளவுக்குப் போயிருக்குமென்று…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1531-1550: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1521-1530 இன் தொடர்ச்சி) 1531. மீயொலி யியல் Hypersonics 1532. மீளாமை வெப்ப இயங்கியல் Irreversible thermodynamics 1533. மீளிணை இ.கீ.அ. நுட்பியல் Recombinant DNA technology 1534. மீள்மை இயங்கியல் Elastodynamics 1535. மீனியல் Ichthyology 1536. மீன் நோயியல் Fish pathology 1537. மீன் பதன நுட்பியல் Fish processing technology 1538. மீன் பிடியியல் Piscatology 1539. மீன்வளப் பொறியியல் Fisheries engineering 1540. மீன்வளர்ப்புப் பொருளியல் Aquaculture economics 1541. முக அழகியல்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75 தொடர்ச்சி) 76. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப் புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே. 77. அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தநா னிலத்தாங் காங்கே பொருந்திய நடுவண் வானம் புகுதரு மாடக் கோயில் இருந்தனர் தலைவ ரானா ரினத்தொழில் மக்க ளெல்லாம் திருந்திய சிற்றா ராங்கண் திகழ்ந்தனர் புறஞ்சூழ்ந் தம்மா. 78. பேரர சதன்கீழ் மூன்று…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1521-1530 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1501 – 1520 இன் தொடர்ச்சி) 1521. மின்னணுப் பொறியியல் Electronics Engineering 1522. மின்னணுவியல் Electronics 1523. மின்னியங்கியல் Electrophysiology 1524. மின்னியல் Electrology (1) 1525. மின்னொளி யியல்  Electrooptics 1526. மீ கணக்கியல் Meta – மாறு, மிதப்பு, மீ, உயர் என்னும் பொருள்களில் பயன் படுத்தப்படுகிறது. Meta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நடுவில், மேல், அப்பால் ஆகும். எனவே, இடத்திற்கேற்ற பொருள் தரும் இணைப்புச் சொல்லாக Meta உள்ளது. மீ என்றால்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1501 – 1520 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1488 – 1500 இன் தொடர்ச்சி) 1501. மிகு ஒலியியல் Hyperacoustics 1502. மிடறு–மூக்கியல் Laryngorhinology 1503. மிடற்றியல் larynx என்னும் புது இலத்தீன் சொல்லின் பொருள் தொண்டை. தொண்டையியல் என்றும் குரல் வளையியல் என்றும் சொல்லப்படுகின்றது. உடலின் இப்பகுதிக்கு மிடறு எனப் பெயர். எனவே, மிடற்றியல் எனக் குறித்துள்ளோம். Laryngology 1504. மிதவை யுயிரியியல் Planktology 1505. மிதிவண்டிப் போக்குவரத்துப்  பொறியியல் Bicycle Transportation Engineering 1506. மின்இயங்கியல் Galvanology / Electrodynamics 1507. மின் உருவாரவியல் …

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1488 –  1500 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1477 – 1487 இன் தொடர்ச்சி) 1488. மாதவிடாயியல்          மாதந்தோறும் என்னும் பொருளுடைய Emmenosஎன்னும் சொல்லில் இருந்து Emmeno உருவானது. பெண்களுக்கு மாதந்தோறும் வரும் விலக்கு குறித்த இயல். Emmenology 1489. மாந்தக் குமுகவியல் Anthroposociology 1490. மாந்தர்விலங்கு தொடர்பியல் மாந்தருக்கும் விலங்கினத் திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயும் துறை. எனவே, Anthrozoology என்பதன் நேர் பொருளைக் குறிக்கக் கூடாது. இதன் மற்றொரு பெயர் மாந்தர்-அல்மாந்தர்-விலங்குகள் ஆய்வு/human–nonhuman-animal studies என்பதாகும். ஆதலின் மாந்தர் விலங்குகள் தொடர் பியல்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 68

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 67. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள் தபால்காரர் ஒரு பணம்(மணியார்டர்) கொண்டு வந்து கையில் நீட்டினார். “நூறு உரூபாய்” என்றார். “எங்கிருந்து?” என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். மாலன், சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு உரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது?…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1477 –  1487 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1465-1476 இன் தொடர்ச்சி) 1477. மனிதச் செய்திறனியல்  பாதுகாப்பு, செயல் திறன் தொடர்பான மாந்தரின் பணிச்சூழல் ஆய்வு. இந்த இடத்தில் Engineering என்பதை  பொறியியல் என்று கூறுவதை விடச் செய்திறனியல் என்பதே சரியாக இருக்கும். மனிதப் பொறியியல் / மனித உடற்கூற்றுப் பொறியியல் எனப் பிறர் கூறுவது பொருந்தாது. மனிதச் செய்திறனியல் எனலாம். பணிச்சூழலுடன் தொடர்புடையது என்பதால் இதனை ergonomics உடன் இணைத்து விடலாம். Human Engineering   1478. மனிதத் திறன்சார் பொறியியல் Human-Factors Engineering 1479….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  41

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  40 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி மலையின் தென்புறத்துச் சரிவில் வேப்பமரங்களில் பசுமைக்குள் அழகான தோற்றத்தோடு காட்சியளித்தது பசுமலைப் பள்ளிக்கூடம். மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் தூய்மையான காற்று, அழகான இயற்கை வசதிகள் நிறைந்த இடம் பசுமலை. அங்குள்ள கல்வி நிலையங்களையும் பயிற்சிப் பள்ளிகளையும் கொண்டு அதை மதுரையின் கேம்பிரிட்சு, ஆக்சுபோர்டு என்று சிலர் மிகுதியாகப் புகழ்வார்கள். கிறித்துவர்களுடைய கண்காணிப்பில் உள்ள பள்ளிக்கூடமானதால் ஒழுங்கிலும் கட்டுப்பாட்டிலும் கண்டிப்புக் காட்டி வந்தார்கள். அரவிந்தன் திருநாவுக்கரசுடன் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று அவரைச்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1465-1476 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1452 – 1464 இன் தொடர்ச்சி) 1465. மறையிடர் பொருளியல் Risk – ஆபத்து,ஆபத்து காரணி, இழப்பு, இடர், அபாயம், அபாய நேர்வு, கெடு, கேடு, இன்னல், இடையூறு, இக்கு எனப் பல வகையாகக் குறிக்கப் பெறுகிறது. அதில் ஒரு இக்கன்னா இருக்கிறது எனப் பேச்சு வழக்கில் இயல்பாக உள்ள ‘இக்கு’ என்பதை நான் முதலில் பயன்படுத்தினேன். இதே சிந்தனை கொண்ட மற்றொருவரும் இச்சொல்லைப் பயன்படுத்தி வந்தார். இருப்பினும் இக்கு என்பதைக் கலைச்சொல் வடிவமாகப் பெரும்பான்மையர் கருதவில்லை. எனவே,…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1452 -1464 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1434 – 1451 இன் தொடர்ச்சி) 1452. மருந்து வேதியியல் Medicinal chemistry 1453. பவ்வீ இயல் Coprology – மலத்தியல்,  கசட்டியல், மலத்தியல், மல இயல், சாண இயல், சாண வியல். சாண அறிவியல் எனப்படுகிறது. மாட்டின் மலம்தான் சாணம். சாணம், மலம் ஆகிய மூலப்பொருள் அடிப்படையில்  ,  சாணவியல் , மலவியல் எனக் கூறுகின்றனர். இரண்டும் சரிதான்.  ஆட்டின் கழிவு பிழுக்கை, குதிரையின் கழிவு இலத்தி, யானையின் கழிவு இலண்டம் முதலான பிற உயிரினங்களின் கழிவுகளையும் …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75

(இராவண காவியம்: 1.2.66-70 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   71.குன்றுறை கோட்டி யானை குறுகியே பழனந் தன்னைத் தின் றுசெங் கரும்பைக் கையிற் செழுங்கிளைக் காகக்கொண்டு சென்றிடும் வழியில் வேங்கை செருக்கவக் கரும்பாற்றாக்கி வென் றதை யெயினர் கொள்ள வீசிவே தண்டஞ்சாரும். 72.புல்லிய சுடுவெம் பாலைப் புறாவயல் மருதம் புக்கு நெல்லயின் றேகும் போது நீர்க்கொடி பலவைக் கவ்விச் செல்லவே யிளம்பார்ப் பென்று செருச்செய்தச் சுளைப்பலாவை முல்லையாய்ச் சிறுவர்க் காக்கி முனைப்பொடு பறந்துசெல்லும். அஞ்சிறைப் பொன்காற்…