தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 – சி.சேதுராமன்

தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4     பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப் பதித்த கவிஞர்தான் தமிழொளி. பாரதியையும், பாரதிதாசனையும் பலரும் பின்பற்றி அவர்களது சுவடுகளில் கால்பதித்து நடந்தாலும் அவர்களின் வழிநின்று பொதுவுடைமைக்குக் குரல் கொடுத்து இறுதிவரை பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் தமிழொளி.   தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியை அடுத்த ‘ஆடூரில்’ சின்னையா – செங்கேணி அம்மாள் இவர்களின் தலைமகனாக 1924-ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் 21-ஆம்…

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 5/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 தொடர்ச்சி)   பெண்ணுக்கு ஒரு சிறு குறையிருந்தாலும் அதைப் பெரிதாக்கி அவளை மூலையில் முடங்க வைத்துவிடுவதும், ஆணுக்கு உடலளவிலும், மனத்தளவிலும் எவ்வளவு பெரிய குறை இருந்தாலும் அதை மூடி மறைத்து அவனுக்கு அழகிய இளமங்கையைத் திருமணம் செய்து கொடுத்து அவளது வாழ்வைப் பாழாக்குவதும். அதற்கு, “ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்” என்று விளக்கம் கூறுவதும் நம்மிடையே வேரூன்றியிருக்கும் கொடுமையான மூட மரபல்லவா? இதைத் தீர்க்கவேண்டுமென்று பாவலர் அறைகூவல் விடுகிறார். நாம்தான் திருந்த வேண்டும்.  மேற்கூறிய…

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 தொடர்ச்சி)   தனித்தமிழைப் பேணச்சொல்லும் அண்ணலின் அறிவுரைக்கு ஈனர்கள் எதிருரை பகர்கின்றார்கள். தனித்தமிழ் நமக்குத் தேவையில்லை, அதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்ற தங்களது மறுப்பை முரட்டுத்தனமாக எடுத்துவைக்கின்றார்கள். சீற்றத்தில் கொந்தளிக்கின்றார் அண்ணல். அவரின் சொற்கள் ஒவ்வொன்றும் எறியப்பட்ட ஈட்டிகளாகப் பாய்கின்றன. நெஞ்சம் திறக்கின்றது. சொற்களின் வன்மையைப் பாருங்கள்:         எண்ணங்கள் ஏதுமின்றி எதிர்ப்புக் கொள்கை            ஏந்திமட்டும் முருட்டாகப் பேசி விட்டாய்.        கண்மூடித் தனமாகச் சொல்லி விட்டால்            கால்முளைத்து நடந்திடுமா உன்றன்…

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 2/5 தொடர்ச்சி) 3 க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்:    மற்றோர் இடத்தில், காவலர்களை நையாண்டி செய்கின்றார் பாவலர். நாட்டில் நடக்கும் பெரும்பெரும் கொள்ளைகளையும், கொலைகளையும் அரசியல்வாதிகளுக்கு அடிவருடிக்கொண்டு கண்டுங் காணாமல் போகும் காவல்துறை, இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்  ஏழைகளை ஐயப்பட்டு உசாவல் என்ற பெயரில் அழைத்துச் சென்று கடுமையாக அடித்துத் துன்புறுத்துவதையும் இரண்டு சக்கர வண்டிகளின் ஆய்வு என்ற பெயரால் தேவையற்ற கேள்விகள் கேட்டு வண்டி உரிமையாளர்களிடம் கையூட்டுபெற்றுக்கொண்டு அனுப்புவதையும் மனத்தில் கொண்டு…

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! – தமிழ நம்பி

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! நீயே, செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை! வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில் செம்மை சேருயர் செழுந்தமிழ் காத்தனை! உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம் இறவா மொழியால் எழுந்திடப் பாடினை! ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில் தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை! கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை! புதுவை பொரித்த புரட்சிக் குயிலே! எதுவும் யாரும் இணையுனக் கில்லை! ‘முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர் வினைசா வெனின்அச் சாநாள்…

பாரதிதாசனின் 125ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா, பெங்களூர்

பங்குனி 12, 2047 / மார்ச்சு 25, 2016 காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பெங்களூர் தமிழ்ச்சங்கம் தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறை  

மொழியாக்க அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி – ஈரநிலா

   புரட்டாசி 22, 1968 / 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள், மன்னார்குடி அருகில் இருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த  நெடுவாக்கோட்டை எனும் ஊரில் வேளாண்பெருமக்கள் அய்யாசாமி–இராசம்மாள் இணையருக்கு, முனைவர். அ. தட்சிணாமூர்த்தி கடைசி மகனாய்ப் பிறந்தார். படிப்புவாசனையே இல்லாதவராயிருந்தும், தன் மகனின் அறிவுத்திறனை அடையாளம் கண்டுகொண்டதந்தை, கடும் இன்னல்களுக்கிடையிலும் தன் மகனைப் படிக்கவைப்பதில் உறுதியாயிருந்தார். பாதங்கள் பழுக்கப்பழுக்க நெடுந்தொலைவு பள்ளிக்கு நடந்துசென்று, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் பயின்று, பள்ளிப்படிப்பை முடித்தவர், தமிழ்மொழியின்மேல் உண்டான அளவிலா அன்பினால் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனானார்….

மொழிபெயர்ப்பறிஞர் ம.இலெ.தங்கப்பா – தேவமைந்தன்

மொழியாக்க அறிஞர் ம.இலெ.தங்கப்பா   ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்கள் தமிழுலகில் மிகுந்துள்ளனர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், அதைவிட அதிகமாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் ம.இலெ. தங்கப்பா.   மொழிபெயர்ப்பு என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது மொழியாக்கம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டு விட்டனர். எல்லாம் ஆங்கிலத்தின் தாக்கத்தால்தான். ‘Translation’ என்பதற்கு ஈடாக மொழிபெயர்ப்பு என்ற சொல்லையும், ‘Trans-creation’ என்பதற்கு ஈடாக மொழியாக்கம் என்ற சொல்லையும் இன்று புழங்குகிறார்கள். இதிலும் இன்னொரு வேறுபாட்டைப் படைத்திருக்கிறார்கள். மொழியாக்கம், மொழிபெயர்ப்பை விடவும் தரத்தால் உயர்ந்தது…

பாரதிதாசன் ஏன் புரட்சிக் கவிஞர் ? – துரை எழில்விழியன்

மார்கழி 04, 2046 / திசம்பர் 20, 2015 இரவு 8.30 – 9.15 பல்வழி அழைப்புச் சொற்பொழிவு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை  

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 07: ம. இராமச்சந்திரன்

(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி) இயல் – 3 இருபதாம் நூற்றாண்டுக் கவிதையும் இலக்குவனாரும்   இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த காலமாகும். நாட்டு விடுதலை வேட்கை மக்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்தது. பாட்டுக்கொரு புலவன் பாரதியும் அவனைப்போலப் பிற கவிஞர்களும் நாட்டு விடுதலையைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதைகளை இயற்றினார்கள். செய்யுள் என்ற சொல்லைக் கவிதையாக்கியவர் பாரதி. மிகவும் எளிய சொற்களால் உள்ளத்து உணர்வைத் தூண்டும் வகையில் பாடினார். நாட்டு விடுதலையைப் பாடிய…

இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ? – பாவேந்தர் பாரதிதாசன்

என் தமிழா? கட்டாயம் இந்திதனைக் கற்க அரசினர்கள் சட்டமியற்றுவதில் சம்மதமோ என்தமிழா! கன்னல் தமிழ்க்கல்வி கட்டாய மாக்காமல் இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ என்தமிழா! தாய்க்குச் சலுகையின்றித் தாழ்கின்றாள் இந்திஎனும் பேய்க்கு நறுநெய்பால் பெய்கஎன்றார் என்தமிழா? உறவிட்ட பார்ப்பனர்கள் இந்திஎன ஊளையிட்டும் பிறவிக் குணங்காட்டும் பெற்றியுணர் என்தமிழா! ‘தமிழ் அழியுமானால் தமிழர் அழிவர்’ — இதை நமைவிழுங்க வந்தவர்கள் நன்கறிவர் என்தமிழா! தம்மவர்கள் நன்மைக்கே தக்கதென்றால் இந்திதனை நம்மவர்கள் அன்னவர்கால் நக்குகின்றார் என்தமிழா! உடல்காக்கச் சோறில்லை என்னுங்கால் நம்பகைவர் கடல்காட்டி வீழ்என்று கத்துகின்றார் என்தமிழா! தென்றற்…

பிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா? – பாரதிதாசன்

வடமொழி எதிர்ப்பு பூசாரி கன்னக்கோல் வடமொழிக்குப் பொதுப்பணத்தைச் செலவழித்துக் கழகமெல்லாம் ஆரியர் அமைத்திடவும் சட்டம் செய்தார் ஐயகோ அறிவிழந்தார் ஆளவந்தார் பேசத்தான் முடிவதுண்டா? அஞ்சல் ஒன்று பிறர்க்கெழுத முடிவதுண்டா அச்சொல்லாலே? வீசாத வாளுக்குப் படைவீடொன்றா? வெள்ளியிறை பிடிஒன்றா வெட்கக்கேடே! வடமொழியைத் தாய்மொழிஎன் றுரைக்கும் அந்த வஞ்சகர், தம் இல்லத்தில் பேசும் பேச்சு வடமொழியா? பிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா? கிழமைத்தாள், நாளின் ஏடு வடமொழியா? எழுதும்நூல் பாடும் பாட்டு வடமொழியா? நாடகங்கள் திரைப்படங்கள் வடமொழியா? மந்திரமென்று ஏமாற்றத்தான் வடமொழிஎன் றால்அதைத்தான் மதிப்பாருண்டோ திரவிடரை அயலார்கள்…