தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப்பகை பா.ச.க.வை நுழைய விடாதீர்! பா.ச.க.விற்குத் தமிழ்ப்பற்று இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தவர்களிடம் தன் உண்மை முகத்தைப் பாசக காட்டியுள்ளது. இரு நாளுக்கு முன்னர் கருநாடகா மாநிலம் சிவமோகா நகரில்தான், துணிவாகத் தன் முகமூடியைக் கழற்றி எறிந்துள்ளது பா.ச.க. தமிழர்களின் வாக்குகளை வேட்டையாட வந்த பாசக நிகழ்ச்சித் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கத் தொடங்கியதும் இடையிலேயே நிறுத்தச் செய்துள்ளது. அவ்வாறு நிறுத்தச் சொன்னது பாசகவின் மூத்த தலைவரும் அத்தொகுதிச் சட்ட மன்ற உறுப்பினருமான ஈசுவரப்பாதான். அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்தவகளில் ஒருவர் தமிழ்நாட்டுப் பாசக தலைவரும்,…

ஆறு – அண்ணாமலை

ஆறு மலையில் பிறந்த நதி மண்ணில் குதிக்கிறது அலைகள் கொலுசுகட்டி அசைந்து நடக்கிறது நிற்க நேரமில்லை நெடுந்தொலைவு போகிறது மௌனம் உடைத்தபடி மனம்விட்டு இசைக்கிறது கல்லில் அழகாக கூழாங்கல் செய்கிறது தண்ணீர்ப் பாலாலே தாவரங்கள் வளர்க்கிறது நதிகள் கரையோரம் நந்தவனம் மலர்கிறது காயாமல் பூமியைக் காப்பாற்றி வைக்கிறது கல்லில் கிழிபட்ட காயம் மறைக்கிறது வெண்பல் நுரைகாட்டி வெளியில் சிரிக்கிறது இடையில் கோடுகளாய் எங்கெங்கோ பிரிகிறது கடல்தான் கல்லறையா கடைசியில் முடிகிறது நம்முடைய அழுக்குகளை நதிகள் சுமக்கிறது காரணம் இதுதான் கடல்நீர் கரிக்கிறது – திரைப்படப்…