‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்

‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் தமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில்  ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக  நடைபெற்றது. ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார்.  திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி…

நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை

புதன் கிழமை 13.06.2018 மாலை 5.00 சந்திரிகா வணிகமனை, இராயப்பேட்டை, சென்னை 14 உலகத்தமிழர் ஒப்புரவாளர் பேரவை நடத்தும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர்  இலக்கிய வேந்தன்  அயலகத் தமிழறிஞருக்கான இலக்கிய விருதாளர் நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா

மறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா – படங்கள்

  செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil என்னும்  முனைவர் மறைமலை  இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா சென்னை கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில்  ‘செவ்வாய்தோறும்  செந்தமிழ்’ என்னும் ்தலைப்பில் இவ்வாண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் மார்கழி 18,2048 செவ்வாய் சனவரி 02,2018 அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. சிவலாயம் செ.மோகன் தலைமையில் நீதிபதி இரா.சுரேசுகுமார், தேர்ந்த இலக்கியவாதி போல் சிறப்பாக அறிமுக உரை யாற்றினார்….

சிங்கப்பூரில் கவிக்கோ கருவூல அறிமுக விழா

  கவிக்கோ அப்துல் இரகுமான்  75 ஆவது பிறந்தநாள் பவளவிழாவும் கவிக்கோ கருவூல வெளியீட்டு விழாவும் சென்னை அண்ணாசாலை காமரசார் அரங்கத்தில்   ஆவணி 12, 2046 / ஆக.29,2015 சனிக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்த அறிமுக நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் சித்திரை 17, 2046 / மே 31 ஞாயிறு காலை சிங்கப்பூர் ஆனந்தபவன் உணவக மாடியரங்கத்தில் நடைபெற்றது. பவளவிழா ஒருங்கிணைப்பாளர்கள்  பேராசிரியர் கவிமாமணி அப்துல்காதர், பதிப்பாளர் சாசகான் ஆகியோர் உரையாற்றினர்.

‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல் அறிமுக விழா, புதுச்சேரி

  புதுச்சேரியில் நூல்அறிமுக விழா – அரவணைப்பு அறக்கட்டளையின் நிதியுதவி வழங்கும் விழா     ‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்அறிமுக விழாவும் அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும்  ஆடி 15, 2045 /31. 07. 2014 மாலை 6 மணி முதல் 8 மணி வரை புதுச்சேரி செயராம் உறைவகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வ. சபாபதி அவர்கள் தலைமை தாங்கி ‘ஒரு சாமானியனின் சாதனை’ என்ற நூலை வெளியிட்டு வாழ்த்திப்…