ஆரியர்கள் தமிழ் எழுத்தைக் கொண்டு தம் மொழியை அமைத்துக் கொண்டனர்    ஐரோப்பாவிலுள்ள ஆரிய மொழியினங்களுக்குக் கிரேக்க, இலத்தீன் எனப் பெயர்கள் இருப்பதைப் போல, இந்தியாவிற்கு வந்த ஆரிய மொழிக்கு ஏதேனும் பெயர் உண்டு என்பரேல் அது சரி, ஒத்துக் கொள்வோம். சமற்கிருதம் என்னும் பெயர் எப்பொழுது வந்தது? ஆரியர் இந்தியாவிற்கு வந்து தமிழிலுள்ள உயிரையும் மெய்யையும் தம் மொழியில் வைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற உயிர் மெய்யெழுத்தையும் அமைத்துக் கொண்டு அவ்வெழுத்துகளுக்கேற்ற மொழிகளையும் ஆராய்ச்சியால் செம்மை செய்து அமைத்துக் கொண்ட தமது மொழிக்குச் “சமற்கிருதம்’…