(தோழர் தியாகு எழுதுகிறார் 212 : “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்”-தொடர்ச்சி) தமிழ்ப் பணி, பின் ஆலயப் பணி இனிய அன்பர்களே! வரலாற்றில் சுவடு பதித்த பெருமக்களை வெறும் அறிவூற்றுகளாகப் பார்த்தலும் பார்க்கச் செய்தலும் போத மாட்டா. அவர்களைக் குருதியும் சதையுமாக அறிதலும் அறியச் செய்தலும் வேண்டும். காலம் நீண்டு கரைந்த பின் இதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்போதும் கூட அவர்களின் அறிவுப் படைப்புகள் அல்லாத பொருண்மியப் படைப்புகள் அவர்களைக் கற்கப் பேருதவியாகும். அவ்வுலகியத்தில் ஆழ்ந்த சமயக் குருமார்களைப் பொறுத்த வரை அவர்களின் இவ்வுலகிய…