(அதிகாரம் 062. ஆள்வினை உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை துன்புறினும், மனம்கலங்காது, வென்று நின்று, இன்புற்று வாழும்திறன்.   இடுக்கண் வரும்கால், நகுக; அதனை,       அடுத்(து)ஊர்வ(து), அஃ(து)ஒப்ப(து) இல்.         எத்துன்பம் வந்தாலும், இகழ்ந்து         சிரித்தலே அத்துன்பத்தை வெல்லும்வழி.   வெள்ளத்(து) அனைய இடும்பை, அறி(வு)உடையார்,       உள்ளத்தின் உள்ளக், கெடும்.      வெள்ளம் போன்ற பெரும்துயரும்,         சிந்தனை உறுதியால் சிதையும்.   இடும்பைக்(கு) இடும்பை, படுப்பர்; இடும்பைக்(கு)     …