தோழர் தியாகு எழுதுகிறார் 192 : கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 191 : இந்து அறநிலையத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா?- தொடர்ச்சி) கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்! இனிய அன்பர்களே! உலகில் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் அவர்கள் தமக்கான சமய வழிபாட்டுக் கூடங்களை அமைத்துள்ளார்கள். அவை அவர்களின் பன்மையப் பண்பாட்டின் அடையாளங்களாக விளங்கி வருகின்றன. நான் அயல்நாடுகள் செல்லும் போது நேரம் கிடைக்கும் போது அவற்றைச் சென்று பார்ப்பதுண்டு. சிலநேரம் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளே அங்கு நடப்பதும் உண்டு. அப்படித்தான் கடந்த 1994ஆம் ஆண்டு வட…

தோழர் தியாகு எழுதுகிறார் 191 : இந்து அறநிலையத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 190 : மணிப்பூர் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!- தொடர்ச்சி) இந்து அறநிலையத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா? நான் இறைமறுப்பாளன். சமய மறுப்பாளன். ஆனால் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இறைமறுப்பு, சமயமறுப்பு இயக்கமன்று. அதே போல் இறைநம்பிக்கைக்கான இயக்கமும் அன்று. தமிழர்களில் பல சமயத்தவர் இருப்பது மெய். சமய மறுப்பாளர்களும் உள்ளனர். சமய விடுமை என்பது ச்மய மறுப்பு விடுமையும் அடங்கலானது. பொது அமைதிக்கும் பொது ஒழுங்குக்கும் உட்பட்டு சமயத்தைக் காட்டிக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் சமயத்தைப் பரப்பவுமான விடுமையே சமய…