இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காட்டக் கையாளப்படும் வழிகள் – ஞா.தேவநேயப்பாவாணர்

  இந்திய நாகரிகம் மட்டுமன்றி உலக நாகரிகமே இந்திய ஆரியரதென்று காட்டுதற்கு, வேதகாலத்தை அளவிறந்து முன் தள்ளி வைக்கும் முயற்சியொன்று இன்று வடஇந்தியாவில் நடை பெற்று வருகின்றது. அறியப்பட்ட தம்பியின் அகவை (வயது) உயர்த்திக் கூறப்படின், அண்ணனின் அகவை தானே உயர்தல் காண்க.   இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காட்டக் கையாளப்படும் வழிகள்- ஞா.தேவநேயப்பாவாணர்   1. பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்ட வரலாற்றை மறைத்தலும் மறுத்தலும். 2. பாண்டியர் நிறுவிய முத்தமிழ்க் கழக உண்மையை மறுத்தல். 3. தமிழ்நாட்டு வரலாற்றை வடக்கினின்றும் வேதக்காலத்தி னின்றும் தொடங்கல்…

தமிழர் நாகரிகம் ஆரியர்க்கு முற்பட்டது! சுமேரியர் நாகரிகத்தினும் மிக உயர்ந்தது!

சிந்துவெளித் தமிழர் நாகரிகம் ஆரியர்க்கு முற்பட்டது; சுமேரியர் நாகரிகத்தினும் மிக உயர்ந்தது!   நல்ல திட்டங்கள் தீட்டி இங்குச் சிறந்த நல்வாழ்வு(சுகாதார) முறையில் நகரங்களை அமைத்தவர்கள் சிந்து மண்டில மக்களே ஆவார்கள்.   இத்தகைய திட்டம் கி.மு.2000 வரை “உர்’ என்னும் நகரில் தோன்றியதாகக் கூறல் இயலாது. அதே காலத்தில்தான் பாபிலோனியாவிலும் இத்திட்டம் தோன்றியது. எகிப்தில் உள்ள கஃகூன் என்னும் நகரில் பன்னிரண்டாம் அரசு பரம்பரையினர் ஆண்ட காலத்தேதான் இது போன்ற திட்டம் தோன்றியது. எனவே, மிக்க புகழ் படைத்த எகிப்தியரும் பாபிலோனியரும் சுமேரியரும்…