ச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா

ஆனி 06, 2050 வெள்ளி 21.06.2019 மாலை 6.00 இரசியப் பண்பாட்டு அரங்கம், கத்தூரிரங்கன் சாலை சென்னை மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச் செம்மல் முனைவர் ச.மெய்யப்பனார் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது சிறந்த நூல்களுக்கான நூலாசிரியர் விருது சிறந்த பதிப்பக விருது நூல் வெளியீடு விருது வழங்குநர் : தோழர் இரா.நல்லகண்ணு அன்புடன் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் தலைவர், மெய்யப்பன் அறக்கட்டளை இராம.குருமூர்த்தி மேலாளர், மணிவாசகர் பதிப்பகம்    

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : நூலாசிரியர் வெ.அரங்கராசன் உரை

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் :  நூலாசிரியர் உரை      ஞானப் பெருநூலாம் திருக்குறள் மேடை முழக்கமாக இல்லாமல், வாழ்வியல் வழக்கமாதல் வேண்டும். அந்த ஞானப் பெருநூல் ஞாலம் முழுதும் பரவும் வகை செய்தல் வேண்டும். திருக்குறளின் திருக்குரல்  ஞாலம் முழுதும் ஓங்கி ஒலித்தல் வேண்டும். ஏனெனில், அது ஞாலப் பொதுமை நூல்; வாழ்வியல் பயன்பாட்டு நூல்.   இந்த அருநூல் குழந்தைகள், சிறுவர்கள், படித்தவர், படியாதவர், பாமரர் என்னும் எவ்வித வேறுபாடுகளோ மாறுபாடுகளோ இல்லாமல், ஞாலம் முழுதும் பரவுதல் வேண்டும், அதற்கு என்னென்ன…

முனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா, சென்னை

 ஆனி 07, 2047 /  சூன் 21, 2016 மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச்செம்மல் முனைவர் ச.மெய்யப்பனார் 84 ஆம் பிறந்தநாள் விழா மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு நூல் வெளியீடு

குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்

குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு!    பதிப்பகங்கள், பணப்பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டும் செயல்படலாம். எனினும் தொடக்கக்காலப் பதிப்பகங்கள் இலக்கியப்பணிகளுக்கே முதன்மை யளித்தன. பழைய இலக்கியங்களையும் புதிய இலக்கியங்களையும் புலவர்களையும் இலக்கியவாணர்களையும் கவிஞர்களையும் கட்டுரையாளர்களையும் நூலாசிரியர்களையும் மக்களுக்கு அறிமுகப் படுத்துவன பதிப்பகங்களே! இலக்கியங்களின் தொடர்ச்சிக்குப் பாலமாகச் செயல்படுவன பதிப்பகங்களே! அத்தகைய பதிப்பகங்களில் குறிப்பிடத்தக்க சிறப்புடையது மணிவாசகர் பதிப்பகம்.  சீர்மிகு மணிவாசகர் பதிப்பகத்தில் ஒருவர் 40 ஆண்டுகளாகப் பணியாற்றுகின்றார் எனில், மிகச்சிறந்த இலக்கியத் தொண்டினைத் தொய்வின்றி ஆற்றுவதாகத்தானே பொருள்! அததகைய அருந்திறலாளர் குணக்குன்றர்  இராம.குருமூர்த்தி ஆவார்.  …