‘வழி வழி வள்ளுவம்’ , சென்னை

அன்புடையீர் வணக்கம்.  சென்னைக் கம்பன் கழகம், சிரீ கிருட்டிணா  இனிப்பகம்,  பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும் ‘வழி வழி வள்ளுவம்‘ தொடர் நிகழ்வின் இந்த மாத  (புரட்டாசி 17, 2048 / 03.10.2017)  நிகழ்விற்கு  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்.   சிறப்புரை:  மறைமலை இலக்குவனார் தமிழ்நிதி விருது பெறுபவர்:  உ.தேவதாசு  அன்புடன் இலக்கியவீதி இனியவன் செயலர், சென்னைக் கம்பன் கழகம்

தமிழ்நிதி விருது வழங்கும் விழா

தமிழ்நிதி விருது  வழங்கும்  விழா     கம்பன் கழகமும் இலக்கிய வீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும் இனைந்து பாரதீய வித்யாபவனில்மார்கழி 19, 2047  செவ்வாய் சனவரி 03, 2017 அன்று   தமிழ்க்கூடல் தனிப்பாடல் நிகழ்ச்சி நடத்தின. இவ்விழாவில் தமிழ்நிதி விருதுவழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.   தலைமை தாங்கிய மேனாள் அறநிலையத் துறை அமைச்சரும், கம்பன் கழகத் தலைவருமான அருளாளர் திரு.இராம வீரப்பன்,  புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “தமிழ் நிதி” என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தார்.   தலைவர்தம் உரையில் புலவர் தி .வே.விசயலட்சுமி,  திருக்குறள்,…

தமிழ்க்கூடல் தனிப்பாடல் – நிறைவு நிகழ்ச்சி

  கார்த்திகை 21, 2047 / திசம்பர் 06, 2016 மயிலாப்பூர், சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : புலவர் தி.வே.விசயலட்சுமி இராம.வீரப்பன் அறிஞர் அரங்கம் : தாவீது (டேவிட்) பிரபாகர் இளைஞர் அரங்கம் : சி.நிகமானந்த(சருமா) இலக்கியவீதி இனியவன் சென்னைக் கம்பன்கழகம் பாரதிய வித்யா பவன் கிருட்டிணா இனிப்பகம்

சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்

மாசி 18, 2047 / மார்ச்சு 01, 2016,  மாலை 6.30 சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : பெ.கி.பிரபாகரன் ‘ஔவையார்’ சிறப்புரை: முனைவர் சாரதா நம்பிஆருரன்  தலைமை : இராம.வீரப்பன் பாரதிய வித்யா பவன்

பாரதிநெறியில் இக்காலச்சிற்றிலக்கியங்கள்-மறைமலை உரை

சென்னைக் கம்பன்கழகம் சிற்றிலக்கியச் சுற்றுலா பாரதிநெறியில் இக்காலச்சிற்றிலக்கியங்கள்- முனைவர் மறைமலை இலக்குவனார் உரை பேரா.மு.இரமேசிற்குத் தமிழ்நிதி விருது வழங்கல் இராம.வீரப்பன் தலைமை மார்கழி 7, 2045 / திசம்பர் 22, 2014 சென்னை  

சென்னைக் கம்பன் கழகத்தில் ‘கலம்பகம்’ உரை

     சென்னைக் கம்பன் கழகத்தின் சார்பில் ”கலம்பகம்”என்னும் தலைப்பில் பெரும்புலவர் வே.பதுமனார் உரையாற்றினார். தமது கல்வித்திறத்தாலும் சொல்வித்தகத்தாலும் அவையினரைக் கட்டிப்போட்டுவிட்டார்   இராம.வீரப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.   பேரா.திருமதி.சாரதா நம்பி ஆரூரன் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்.  (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)   செய்தியும் படங்களும்: முனைவர் மறைமலை இலக்குவனார்