வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30 இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களதுஉறவினர்கள் தவிக்கின்றனர். தமிழீழத் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில் இழந்தும் 1000 நாட்களாக இரவு பகலாகப் போராடும் உறவுகள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகப் பகுதியில் 8 மாவட்ட மக்களாகநடத்தவுள்ள நிலையில் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குஅனைத்துப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆதரவு…

இலண்டனில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாகக் கொன்றழிக்கப் பட்டுக்கொண்டிருந்த போது “அனைத்துத் தேயமே! ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என உரத்துக் குரல் கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் (Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள) ஈகைப்பேரொளி முருகதாசன் முதலான 21 உயிர் ஈகையர் நினைவுக் கல்லறையில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசன் உயிர்க்கொடை யளித்த (தியாகமரணமடைந்த)…

‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்

‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் தமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில்  ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக  நடைபெற்றது. ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார்.  திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி…

தமிழ் இளையோர் அமைப்பு – கற்க கசடற

2018 தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற  தொல்காப்பியம்  திருக்குறள் ஆத்திசூடி போட்டிகள் அறிவதற்கு 07427261785  அல்லது  07915379101 எண்ணுக்கு அழையுங்கள்.   சுசிதா / Sujitha  

போருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை

போருக்குப் பிந்திய எழுத்துக்களில் இரு நூல்கள் + அசோகமித்திரன் எழுத்துரை   போருக்குப் பிந்திய இரு நூல்கள் ‘புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்’ – நிலாந்தன் ‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ – சிராசு மஃகூர் வழிப்படுத்தல்:  தோழர் வேலு   உரைகள்:  தோழர்கள் நடேசன் பாலேந்திரன், முத்து, சந்தூசு,இராகவன்   அசோகமித்திரன் எழுத்தும் ஆளுமையும் உரை- ஆ.இரா. வேங்கடாசலபதி கல்வியலாளர், ஆய்வாளர் (தமிழ் நாடு) வழிப்படுத்தல்:  எம்.பௌசர்   காலம் –  சித்திரை 23, 2048 / 06 மே 2017 சனி…

வே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன் குறும் பட வெளியீடும்

  வே.சுப்பிரமணியம் அஞ்சலிக்கூட்டமும் பண்டாரவன்னியன்  குறும் பட வெளியீடும் சித்திரை 17, 2048 / ஏப்பிரல் 30, 2017 மாலை 3.00 முதல் இரவு 8.00 வரை அ/மி. கனகதுருக்ககை யம்மன் ஆலயம், இலண்டன் சாகித்தியஇரத்தினா, காலம் சென்ற  முல்லைமணி கலாநிதி வே.சுப்பிரமணியம் அவர்களுக்கான அஞ்சலிக்கூட்டமும் அவரின் படைப்பான வன்னி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன்  குறும் பட வெளியீடும்