மலேசிய மாநாடு:  அரசின் நிலைப்பாடு சரியே! – இலக்குவனார் திருவள்ளுவன்

மலேசிய மாநாடு:  அரசின் நிலைப்பாடு சரியே! தனிநாயகம் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் 11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் இத்திங்கள் 7,8,9ஆம் நாள்கள் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். அதற்கடுத்த இரு வாரத்தில் மலேசியாவிலும் சட்டமுறைப்படி இல்லா அமைப்பால் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதையும் 11ஆவது மாநாடு என்றே அறிவித்துக் கொண்டனர். இம்மாநாடு குறித்துச் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாசக ஆதரவாளரான தலைவர் ஒருவரால் நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று வந்துள்ளது. துடிப்புடன் செயலாற்றும் மேனாள் அமைச்சர் ஒருவரும் இந்த…

நக்கீரனுக்கு நன்றி!

நக்கீரனுக்கு நன்றி!  அரசியல் செய்திகளுடன்  தமிழுணர்வு செய்திகளையும் வெளியிடும் இதழ்களில் நக்கீரனும் ஒன்று.   தமிழ்க்காப்புக்கழகம்,  தென்னிந்திய நடிகர்சங்கத்தின் மட்டையாட்டத்திற்கான அணிகளின் பெயர்களைத் தமிழில்  சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.  இதனைப் பாரறியும் வண்ணம் தொகுதி 28, எய் 109 நாள்  சித்திரை 3- 5/ ஏப்.16-18 இதழில்வெளியிட்டுள்ளது நக்கீரன். அதற்கு நாம் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் மட்டையாட்ட அணிகளின் பெயர்களுக்கு எதிர்ப்பு! பொருட்படுத்தாத நடிகர் சங்கம்! (வந்த செய்தி) உறுதிப்படுத்தப்பட்ட உண்மை: நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு 26 கோடி…