வானளந்த புகழ் உடையாய் ! – ஐ.உலகநாதன்

வானளந்த புகழ் உடையாய்! வசையுரைத்த பழிவடக்கர்             வாயடக்கி நெரித்தவள் நீ திசைவென்ற மன்னவர்தம்             செங்கோலில் சிரித்தவள்நீ இசைநின்ற கல்லிலெல்லாம்             இன்பவலை விரித்தவள்நீ விசும்பிடையே நீலஉடை             விரும்பித் தரித்தவள் நீ பாரதத்தாய் மார்பகத்தில்             பாலாகாச் சுரப்பவள்நீ பணிந்தாரைப் பரிந்தணைக்கும்             பண்பாட்டில் இருப்பவள்நீ சீரறிந்த திருக்குறளில்             வேரறிந்து நிற்பவள் நீ தித்திக்கும் புத்தமுதாய்             எத்திக்கும் சிறப்பவள் நீ நீரறிந்த மிச்சத்தை             நெருப்பறிந்த எச்சத்தை நானறியத் தந்தவள்நீ             நாடறிய வந்தவள்நீ தேனளந்த கருப்பொருளே            …

எல்லாம் தமிழிலே! – செ.சீனிநைனா முகமது

எல்லாம் தமிழிலே! அன்னை என்னைக் கொஞ்சிக் கொஞ்சி அன்பு பொழிந்தது தமிழிலே என் சின்னச் சின்ன இதழ்கள் அன்று சிந்திய மழலை தமிழிலே. நிலவு காட்டி அமுதம் ஊட்டிக் கதைகள் சொன்னது தமிழிலே அவள் புலமை காட்டி என்னைத் தாலாட்டி உறங்க வைத்தது தமிழிலே பிள்ளை என்று தந்தை சொல்லிப் பெருமை கொண்டது தமிழிலே நான் பள்ளிசென்றே அகரம் எழுதப் பழகிக் கொண்டது தமிழிலே. பருவம் வந்து காதல் வந்து பாட்டு வந்தது தமிழிலே அவள் உருவம் பார்த்தே உருகும் போதில் உவமை வந்தது…

மூச்சே நம் மொழி! – மின்னூர் சீனிவாசன்

குழல்து ளைகளில் மேவும் செம்மொழிகுயில் குரலின் நெடிலிசை கூவும் செம்மொழி! மழலை மொழிக்கிளி பேசும் செம்மொழிமுடி மன்னர் மக்களோ டுயர்ந்த நம்மொழி! தாயாம் இயற்கையே தந்த செம்மொழிஇது தன்னோர் யானைவெண் தந்தச் செம்மொழி! ஓயாக் கடலொலி இழிழாம் எண்ணுவீர்நாம் உணர்ந்து வளர்த்தது தமிழாம் எண்ணுவீர்! முத்தமிழ்க்கலை யறிந்த செம்மொழிசுடர் முத்து அமிழ்கடல் செறிந்த நம்மொழி! வித்தாம் அறிவியல் போற்றும் செம்மொழிபுகழ் விரியும் விசும்புடைக் காற்றும் செம்மொழி! கண்ணோர் திருக்குறள் யாத்த செம்மொழி – சிலம்புக் கலையின் களஞ்சியம் படைத்த செம்மொழி! நண்ணும் மானுட வெற்றிச்செம்மொழி…

ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்? – ப.மு.அன்வர்

ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்? ஓசைக் கிளர்ச்சியினால்             உருண்டுவரும் உலகத்தில் ஆசைக் கிளர்ச்சியினால்             அமைவதுதான் உயிர் வாழ்க்கை ஆசைக் கிளர்ச்சி             அடர்ந்தெரியும் நேரத்தும் ஓசையின்றி வாழ்ந்த             ஒருகாலம் குகைக்காலம் ஊழித்தொடக்கத்தில்             ஊமையரின் கூட்டத்தில் பாழைப் பதுக்கியவன்,             பயிலுமொழி பகர்ந்தவன்யார்? அவிழ்ந்தவாய் அசைவில்             அகரம் பிறந்துவர உவந்தொலிகள் ஒவ்வொன்றாய்             ஒலித்துவரக் கற்றவன்யார்? ஒலியலைகள் ஒவ்வொன்றாய்             எழும்பி ஒருங்கிணைந்து தெளிவான சொல்லமையக்             கண்டு தெளிந்தவன்யார்? குறில்நெடிலின் வேற்றுமையைக்             குறித்தறிந்து முதன்முதலில் அறிவறியும்…

இவனா தமிழன் ? இருக்காது – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

இவனா தமிழன் ? இருக்காது யானைக்குப் பூனை பிறக்காது! இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால் எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன் இனத்துக்கு நேர்ந்த குறைபேறு! தமிழால் வேலையில் சேருகிறான் தமிழால் பதவியில் ஏறுகிறான் தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் – அதைத் தடுத்தால் உடனே சீறுகிறான்! வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான்! வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான் கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக் கண்டவர் மொழியில் மாற்றுகிறான் –அதைக் கடிந்தால் உடனே தூற்றுகிறான்! தானும் முறையாய்ப் படிப்பதில்லை தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை தானெனும் வீம்பில்…

சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!

 மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர்.  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…