உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே!   பசியென்று  வருபவரைப், பரிவுடன் பார்த்திடுவீர்! புசியென்று உணவளித்து, புன்னகையும் சேர்த்திடுவீர். கசியும் நீரூற்றாய்க் கண் கலங்கிக் கேட்பவர்கள், பொசியும் இறையன்பால், பொங்கியுமை வாழ்த்துவரே! – கெருசோம்  செல்லையா